14/04/2026
இலங்கையிலிருந்து உலக மேடைக்கு! 'மக்கள் நாயகன் சதீப்' நடிப்பில் பிரம்மாண்ட தமிழ் ஆல்பம்!
தமிழ் இசை உலகில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் நோக்கில், புகழிஷா குளோபல் என்டர்டெயின்மென்ட் (Pugalisha Global Entertainment) தயாரிப்பில் பிரம்மாண்டமான புதிய ஆல்பம் பாடல் ஒன்று தயாராகி வருகிறது.
தயாரிப்பாளர் புகழிஷா ஸ்ரீகரன் அவர்களின் பெரும் முயற்சியில் "Production No. 02" ஆக உருவாகும் இந்த ஆல்பம், தற்போது இறுதி கட்டப் பணிகளில் இருப்பதாகவும், விரைவில் உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்திலான இந்த இசை வீடியோவை இலங்கையின் முன்னணி இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கதிர் ராஜசேகரம் இயக்கியுள்ளார். கலைநயம் மிக்க காட்சியமைப்புகளுடன், ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு நிகரான தரத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கு Saraigas Music Lab நிறுவனர், இளம் இசைக்கலைஞர் ஷராஃப் தானிஸ் இசையமைத்துள்ளார். இன்றைய கால இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப, புதுமையான தொழில்நுட்பத்துடன் பாடலின் இசை வடிவமைக்கப்பட்டுள்ளது.
"அய்யோ சாமி" புகழ் சர்வதேச கவிஞர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி முத்திரை பதித்த இவரின் வரிகள், இந்த ஆல்பத்திற்கும் மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாயகனாக 'மக்கள் நாயகன் சதீப்'
இந்த ஆல்பத்தில் கதாநாயகனாக மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞரும் சமூக ஆர்வலருமான 'மக்கள் நாயகன் சதீப்' நடித்துள்ளார். ஏற்கனவே "Ceylon Srivalli" மூலம் கவனம் ஈர்த்த இவர், இந்தப் படைப்பின் மூலம் ஒரு 'சென்சேஷனல் ஹீரோவாக' சர்வதேச அளவில் தடம் பதிப்பார் எனத் தெரிகிறது.
இப்பாடலின் தலைப்பு, கதாநாயகி மற்றும் ஏனைய கலைஞர்கள் குறித்த விபரங்களை தயாரிப்பு நிறுவனம் தற்போது வரை ரகசியமாக வைத்துள்ளது.
"இலங்கையிலிருந்து உலகிற்கு" (From Sri Lanka to the World) என்ற மகுடத்துடன் வெளியாகும் இந்த ஆல்பம், தமிழ் இசைத்துறையில் புதிய அலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.