TRICK Management

TRICK Management TRICK Management is a COMMUNITY Organisations which fullfills the needs and demands

சிரிபீன்தத்துவம்
15/08/2014

சிரிபீன்
தத்துவம்

வாழ்கை என்பது
15/08/2014

வாழ்கை என்பது

save  rain  water
15/08/2014

save rain water

வெண்டைக்காய் தயிர் பச்சடிதேவையானவை: வெண்டைக்காய் -  15 பச்சைமிளகாய் - 2 தயிர் - 1 கப் உப்பு - சிறிது எண்ணெய்,கடுகு, கறிவ...
14/08/2014

வெண்டைக்காய் தயிர் பச்சடி
தேவையானவை:

வெண்டைக்காய் - 15
பச்சைமிளகாய் - 2
தயிர் - 1 கப்
உப்பு - சிறிது
எண்ணெய்,கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - தாளிக்க

செய்முறை:

• பச்சைமிளகாய், வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக அரிந்து வைக்கவும்.

• ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், வெண்டைக்காய் இரண்டையும் சிறிது உப்பு தூவி, வதக்கி, தயிரில் சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

• சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

• வெண்டைக்காய் பச்சடி என்றாலே சாப்பிடும்போது புதிதாக செய்தால்தான் நன்றாக இருக்கும். முன்னமே செய்து வைத்தால் சாப்பிடும்போது கொஞ்சம் கொழகொழப்பு தெரியும்.

• முதலில் தயிரை தாளித்து வைத்துக்கொண்டு சாப்பிடப்போகும்போது வெண்டைக்காயை வதக்கியும் சேர்க்கலாம்.

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும...
14/08/2014

1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். இதுகுறித்து ஆன்மீக குரு மோகன்ஜி கூறுவதாவது, காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2. பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.

3 காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

4 காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

5. காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி ‘காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்’ ‘மதியம் அளவரசனைப் போல சாப்பிட வேண்டும்’ ‘அரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

6. பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகதத்ற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை, மந்ரிரங்களை ஓதுவதும் சிறந்த செயலாகும்.

7 நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.

8 பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்.

உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், 'எபோலா' வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய்,கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான...
14/08/2014

உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும், 'எபோலா' வைரஸ் என்ற உயிர்கொல்லி நோய்,
கடந்த ஆண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் வசித்த, 2 வயது சிறுவனிடம் இருந்து தான், மற்றவர்களுக்கு பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1976ல், மேற்கு ஆப்ரிக்க நாடான, காங்கோவில், எபோலா நதிக்கரையில் தோன்றி யதால், இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வைக்கப்பட்டது.இதன்பின், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த நோயின் தாக்கம் தெரியும். இதில், ஏராளமானோர் செத்து மடிவர். இந்த நோயை குணமாக்குவதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், முன் எப்போதையும் விட, தற்போது, மிக தீவிரமாக இந்த நோய் தாக்கத் துவங்கியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லையை கடந்துள்ளதாக கூறப்படும், இந்த வைரஸ் எமன், மற்ற நாடுகளின் பக்கமும், தன் கொலை வெறியை திருப்பக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கான விஷ வித்து, கடந்தாண்டு இறுதியில், மேற்கு ஆப்ரிக்க நாடான, கினியாவில் உள்ள, குயிக்கேடோய் என்ற சிறிய நகரத்தில் ஊன்றப்பட்டது.இரண்டு லட்சம் பேர் வசிக்கும் இந்த நகரம், மற்ற ஆப்ரிக்க நாடுகளான, சியாரா லியோன், லைபீரியா ஆகியவற்றின் எல்லையில்அமைந்து உள்ளது. இங்கு கூடும் வாரச்சந்தை, மிகவும் பிரபலம். இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக, அண்டை நாடுகளில் இருந்து, ஏராளமானோர் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பரில், குயிக் கேடோய் நகரில் வசித்த, 2 வயது ஆண் குழந்தைக்கு, 'எபோலா வைரஸ்' பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில், அந்த குழந்தைக்கு, கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்பட்டன. டிசம்பர், 6ம் தேதி, நோய் பாதிப்பு அதிகமாகி அந்த குழந்தை இறந்தது. ஒரு வாரத்துக்கு பின், அந்த குழந்தை யின் தாயும், அதன்பின், குழந்தையின் பாட்டி யும், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.ஆனாலும், அந்த நகரத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், எபோலா வைரஸ் தாக்கப்பட்டதால் தான், இவர்கள் இறந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.குழந்தையின் பாட்டியின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த, மேலும் இரண்டு பேருக்கு, சில வாரங்களுக்கு பின், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு, அடுத்த சில நாட்களில் இறந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியரும், டாக்டரும், அடுத்தடுத்து, இந்த வைரஸ் தாக்கப்பட்டு இறந்தனர்.
இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள நகரங்களில் வசித்த, இவர்களின் உறவினர்களுக்கும் இந்த நோய் பரவியது. மார்ச் மாத மத்தியில், ஒட்டு மொத்த கினியாவிலும், நோய் பாதிப்பு தெரிந்தபின் தான், 'எபோலா' வைரஸ் வேகமாக பரவி வருவதை சுகாதார அதிகாரிகள் உணர்ந்தனர். அதற்குள், அருகில் உள்ள, சியாரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகளில் வசித்த பலருக்கு இந்த நோய் பரவி விட்டது. இந்த மூன்று நாடுகளுமே, மிகவும் ஏழ்மையான நாடுகள் என்பதாலும், மூன்று நாடுகளுக்கும் இடையே அதிகப் படியான மக்கள் போக்குவரத்து உள்ளதாலும், நோய் வேகமாக பரவியது.லைபீரியாவில், மார்ச், ஏப்ரல் மாதத்துக்கு பின், இந்த நோய் குறித்த அறிகுறி தெரியவில்லை. இதனால், 'எபோலா வைரஸ், இனி பரவ வாய்ப்பில்லை' என, பொதுமக்கள் நினைத்தனர். ஆனால், சில மாத இடைவெளிக்கு பின், முன்பை விட, மிக வேகமாக இந்த நோய், தற்போது பரவத் துவங்கியுள்ளது. லைபீரியாவில் மட்டும், இதுவரை, 156 பேரின் உயிரை, இந்த நோய் காவு வாங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாடுகளான, கானா, நைஜீரியா, கேமரூன், காங்கோ ஆகியவற்றிலும், இந்த நோயின் தாக்கம் தென்படத் துவங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,779 பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களில், 961 பேர் இறந்துள்ளனர்.நைஜீரியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இந்த நோயின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த நோயின் மையமாக, சியாரா லியோன் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த நோய், வேகமாக பரவி வருவது, சர்வதேச நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், கினியாவிலிருந்து சென்னைக்கு வந்த, தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, இந்த நோயின் தாக்கம் இருப்பதாக வெளியான செய்தியாலும், டில்லி, மும்பை ஆகிய நகரங்களில், இந்த நோய் தாக்கத்துடன் சிலர் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான செய்தியாலும், இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ளது.இதன்மூலம், மேற்கு ஆப்ரிக்க நாடுகளை தாண்டி, மற்ற நாடுகளிலும், இந்த வைரஸ் எமன் கால் பதித்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்?
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி, தர்மாபுரி, வெங்கடாசலபுரம், கோவிந்த நகரம், கடமலைக்குண்டு, கண்டமனூர் மற்றும் ஆண்டி பட்டி பகுதிகளை சேர்ந்த, 2,000க்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்ரிக்க நாடுகளில் பணிபுரிகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில்எந்தெந்த நாட்டில் 'எபோலா' வைரஸ் தொற்று உருவாகி உள்ளது என்ற விவரம் இங்குள்ள கிராம மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் வெளிநாட்டில் உள்ள தங்கள் மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என, கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். பலர் தங்களது மகன்களை, 'உடனடியாக விடுப்பு எடுத்து ஊர் திரும்பி வா,' எனக்கூறி வருகின்றனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆனாலும், எத்தனை பேர் உள்ளனர் என்ற துல்லியமான தகவல், அரசிடம் இல்லை.
தனிமைப்படுத்துதல்...:
'எபோலா வைரஸ் தாக்கத்துக்கு ஆளானவர்களை, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம், இந்த நோய், மேலும் பலருக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும்' என, சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலான, மேற்கு ஆப்ரிக்க நாடுகளில், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை.
பிணங்களை தொடுவதால்...:
'எபோலா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் மூலமாகவே, இந்த நோய் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்கள், இறந்தவர்களின் உடல்களை தொடுவது தான், இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. எனவே, 'மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டும்' என, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- நமது நிருபர் -

அம்மா
14/08/2014

அம்மா

பழைய சாதம் சாப்பிடலாம் வாங்க...!
14/08/2014

பழைய சாதம் சாப்பிடலாம் வாங்க...!

உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள 'சான் டூங்' (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டரு...
14/08/2014

உலகிலேயே மிகப்பெரிய குகை எது தெரியுமா? வியட்நாமில் உள்ள 'சான் டூங்' (Son Doong Cave) குகைதான் அது. சுமார் 8 கிலோ மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட இந்தக் குகையின் உள்ளே ஒரு காடும், ஆறும் உள்ளன. இதன் உள்ளே ஒரு 40 மாடி கட்டிடத்தை வைத்து விடலாம் என்றால் இதன் பிரம்மாண்டத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், 1991 வரை இந்தக் குகை கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதன் வாயிலில் இருந்த 'மெகா' பள்ளத்தைக் கண்டு யாரும் உள்ளே நுழையத் துணியவில்லை. 2009ல் தான் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இதன் உள்ளே இறங்கினார்கள். மனிதன் இறங்க அஞ்சிய இந்த நுழைவாயில், 80 மீட்டர் ஆழம் கொண்டதாகும். பாதுகாப்பாக கயிற்றைக் கட்டிக்கொண்டு தான் இதற்குள் இறங்க வேண்டும்.

லாவோஸ் - வியட்நாம் எல்லையில் அமைந்துள்ள இந்தக் குகை, 150 தனித்தனி குகைகளால் ஆன ஒரு பிரம்மாண்ட அமைப்பாகும். 'சான் டூங்' என்றால் 'மழை ஆறு' என்று பொருள். சுமார் 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஆறு ஓடியதில், இந்த குகை உருவாகியுள்ளது. மலையின் சுண்ணாம்புப் பாறைகளை இயற்கிச் சிற்பியான ஆறு அரித்து, உள்ளே கண்கவரும் பிரம்மாண்ட சிற்பங்களை உருவாக்கியுள்ளது. 'Dog's Paw' என்ற பாறையை பார்க்க நாயின் பாதன் போலவே உள்ளது. 'குகை முத்துக்கள்' என்து இயற்கையின் மற்றொரு அற்புத படைப்பாகும். பல நூற்றாண்டுகளாக மணல் துகள்களின் மேல் ஆற்று நீர் சொட்டு சொட்டாக வடிந்து, இந்த அழகிய படிமானங்களை உருவாக்கியுள்ளது.

குகையின் கூரை ஒரு பகுதியில் உடைந்து, உள்ளே ஒரு மழைக் காடே உருவாகியுள்ளது. இந்தக் காட்டை 'கார்டன் ஆஃப் ஈடம்' (Garden of Edam) எனடறு அழைக்கின்றனர். அடர்ந்த வனம் உருவாகி, அதில் பறக்கும் நரி, இருவாச்சி, குரங்கு, பூச்சி வகைகள் போன்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன.

ஆக்ஸாலிஸ் என்ற மூர் நிறுவனம், இந்த குகைக்குள் மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. மிகக் குறைந்த அளவு பயணிகளை மட்டுமே அனுமதிக்கின்றனர். இந்த சுற்றுலா சுவாரஸ்யமும், திகிலும் கலந்த சுகமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் தேடல் மீது காதல் உள்ளவர்கள்.

SUPPORT OUR CONCERN TRICK MANAGEMENT
14/08/2014

SUPPORT OUR CONCERN TRICK MANAGEMENT

welcome to TRICK MANAGEMENT
14/08/2014

welcome to TRICK MANAGEMENT

Address

Chennai
6000029

Website

Alerts

Be the first to know and let us send you an email when TRICK Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share