Prabanja Vastu Member of Andal Vastu

Prabanja Vastu Member of Andal Vastu Andal E Swaminathan approaches vastu as a pure science and does not bend towards unnecessary superst

02/07/2023
05/11/2022
செய்யும் தொழிலில் வெற்றிகளை கொடுக்கும் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேஸ்வரர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர்) திருக்கோ...
23/01/2020

செய்யும் தொழிலில் வெற்றிகளை கொடுக்கும் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேஸ்வரர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர்) திருக்கோயில்


இறைவர் திருப்பெயர்: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்.
இறைவியார் திருப்பெயர்: சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்.
தல மரம்: வில்வம்.

தீர்த்தம் :பிரம்ம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம் (அருச்சுன தீர்த்தம்), முள்ளியாறு.
வழிபட்டோர்: விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், அருச்சுனன், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகுமுனிவர், காசிபர், கண்வர், அகத்தியர், வசிட்டர்,வாமதேவர் முதலியோர்.

தல வரலாறு
பஞ்சாரண்யத் தலங்களுள் ஐந்தாவதான வில்வாரண்யம் எனப்படும் இத்தலம் வில்வவனம் - கூவிளவனம் என்னும் சிறப்பினது. (கூவிளம் - வில்வம்) கூவிளம்புதூர் - கொள்ளம்புதூர் ஆயிற்று.
இத்தலம், வில்வவனம், பிரம்ம வனம், பஞ்சாக்ஷரபுரம், காண்டீபவனம், ஆகிய பெயர்களையும் கொண்டது.
வில்வாரண்யத்தில் சுயம்பு மூர்த்தியாகச் சிவபெருமானைத்தரிசித்த பிரம்ம தேவன் , அங்கு ஒரு தீர்த்தம் தனது பெயரில் உண்டாக்கி , இறைவனை வழிபட்டு வந்தான். இதனால் மகிழ்ந்த பெருமான், பூத கணங்களோடும், உமா தேவியாரோடும் எழுந்தருளி, பஞ்சாக்ஷர உபதேசம் செய்தருளி,பிரமனுக்கு மீண்டும் படைப்புத் தொழிலை அருளியதாகத் தல புராணம் கூறுகிறது. எனவே இத்தலம், பிரம்ம வனம் என்றும்,பஞ்சாக்ஷர புரம் என்றும் பெயர்கள் பெற்றது.
தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, அமுதத் திவலைகள் சிதறி இங்கு விழுந்து, வில்வ மரங்களாக மாறி, வில்வ வனம் ஆகியது என்பர்.
காண்டீபனாகிய அர்ச்சுனன் தவமியற்றி, இத்தலம் என்பெயரை உடையதாக இருக்க வேண்டும் என வரம் வேண்டியதால், காண்டீப வனம் எனப்பட்டது.
பொதிகை மலையிலிருந்து இங்கு எழுந்தருளிய அகத்திய முனிவர் , வெட்டாற்றில் நீராடி, இறைவனை வழிபட்டு , ரிஷப வாகன தரிசனம் பெற்றார். நதிக்கும் அகஸ்திய காவேரி என்ற பெயர் ஏற்பட்டது.
அர்ச்சுனன் இப்பெருமானை வழிபட்டுப் பாசுபதம் பெற்றதால், காண்டீப வனம் என்று இத்தலம் பெயர் பெற்றது.
விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேஷன், இடைக்காடர், வரகுணபாண்டியர், கோச்செங்கட்சோழர்,பிருகு முனிவர், காச்யபர், மார்கண்டேயர், கண்வர்,வசிஷ்டர், வாமதேவர் ஆகியோரும் பூஜித்துள்ளனர்.

பன்றியாகப் பிறந்த அந்தணன் ஒருவன் இங்கு வந்து அகத்திய தீர்த்தத்தில் மூழ்கி, தேவ வடிவம் பெற்று முக்தி அடைந்தான்.
கொள்ளை அடிக்கும் எண்ணத்தோடு இத்தலத்திற்கு வந்து இரவு முழுதும் கண் விழித்திருந்த திருடனும் நற்கதி பெற்றான்.
ஞானசம்பந்தர், பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில் கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடஞ் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களைக கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக் கோலாகக் கொண்டு "கொட்டமே கமழும்" எனத் தொடங்கும் பதிகம் பாடி மறுகரையை அடைந்தார். இறைவன் காட்சிதர, தரிசித்து, ஆலயத்தை அடைந்து போற்றிப் பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். (இவ்வற்புதம் இன்னும் இத்தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது). ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம்போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.
சிறப்புகள்
கோவிலுக்கு முன்புறம் உள்ள பிரம்ம தீர்த்தம் , பிரம்மனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் தை வெள்ளிகளில் நீராடுவர். கோயிலுக்கு வடப்புறம் உள்ள அர்ஜுன தீர்த்தத்தில் பங்குனிப் பௌர்ணமியில் நீராடினால் நற்பயன்களை அடையலாம். அகத்தியர் தோற்றுவித்த அகத்திய தீர்த்தத்தில் கார்த்திகை சோம வாரங்களில் நீராடி தோஷங்கள் நீங்கப் பெறலாம்.

முல்லைவனமாகிய திருக்கருகாவூரில் உஷக் காலத்திலும், பாதிரி வனமாகிய அவளிவ நல்லூரில் கால சந்தி காலத்திலும், வன்னி வனமாகிய ஹரித்துவார மங்கலத்தில் (அரதைப்பெரும் பாழியில்) உச்சிக்காலத்திலும், பூளைவனமாகிய ஆலங்குடியில் (திரு இரும்பூளையில்) சாயரக்ஷையிலும் , திருக்கொள்ளம்பூதூரில் அர்த்த ஜாம தரிசனமும் செய்வது மிகவும் சிறந்த பலன்களை அளிக்க வல்லது என்பார்கள். இவை ஐந்தையும் ஒரே நாளிலும் தரிசிப்பர்.
பிரம்மவனம், பஞ்சாட்சரபுரம், காண்டீபவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.
சுவாமி விபுலானந்தர் அவர்கள் - யாழ் நூலின் ஆசிரியர் பல காலம் ஆராய்ந்து வெளியிட்ட யாழ் நூலை (1947-ல்) அரங்கேற்றிய இடம் இத்தலமேயாகும்.
மூன்றாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலுள் உள்ளன.
கல்வெட்டுக் குறிப்பில் சுவாமி 'கொள்ளம்பூதூர் உடையார் ' என்றும்; தேவி 'அழகிய நாச்சியார் ' என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும், நாள் வழிபாட்டுக்கும் நிவந்தங்கள் விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.
கல்வெட்டில் இத்தலம் 'அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க் கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர் ' என்று குறிக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் அருகே, பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான இடைக்காட்டுச் சித்தரின் கோயில் அமைந்துள்ளது.
அமைவிடம் மாநிலம்: கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.

தொழில் மேம்படுவதற்க்கும், கடன் சுமை தீர்வதற்க்கும், குடும்பத்தில் நிம்மதி கிடைப்பதற்க்கும், நிறைவான செல்வ வளம் பெற்று வளமான வாழ்க்கை வாழ்வதற்க்கும் உளவியல் சார்ந்த நிரந்தர தீர்வுகள் ஆண்டாள் வாஸ்துவின் அடிப்படையில் வழங்கப்படும்..தொடர்புக்கு ஆண்டாள் வாஸ்து குழுமம் 94999 55970
ஆண்டாள் வாஸ்துவானது பரிகாரங்களுக்கு அப்பாற்பட்டது

#திருக்கொள்ளம்பூதூர் #வில்வாரண்யேஸ்வரர் #திருக்களம்புதூர் #திருக்களம்பூர் #தொழில் #கடன்சுமை #நிம்மதி #செல்வம் #உளவியல் #வாழ்க்கை #வாஸ்து

ஈசான்ய மூலை என்பது என்ன? எந்த அறை எங்கு இருக்க வேண்டும்?நம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து. நம்முடைய குணா திசையங்க...
01/12/2019

ஈசான்ய மூலை என்பது என்ன? எந்த அறை எங்கு இருக்க வேண்டும்?

நம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து. நம்முடைய குணா திசையங்கள், வருமானம் மற்றும் மக்கட் பேறு அனைத்தையும் தீர்மானிக்கும் வீட்டு அமைப்பே வாஸ்து. அதனை அறிந்து கொண்டால் நம்மை நாம் அறிந்து கொள்வது சுலபம்.

நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரலாம். இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் வானம் தெரியும்படியாக அமைப்பு இருப்பது சிறப்பு.

ஈசான்ய மூலை என்றதும் அது ஈசனுக்குரிய மூலை என்று பலரால் கூறப்படுகின்றது. இது தவறான கருத்து என்பதே அறிவியல் கூறும் உண்மையாகும். வடகிழக்கு மூலை ஒரு இடத்தின் ஆற்றல் வரும் இடமாக கருதப்படுவதால், இந்த மூலையை ஒரு இடத்தின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய மூலையாக கருதலாம்.அது மட்டுமல்லாமல் இந்த மூலை நீரின் ஆதாரம் என்பதால், வடகிழக்கு வெளி மூலையில் ஆழ்துளை கிணறு, நீர் தேக்கும் தொட்டி, கிணறு போன்றவற்றை அமைத்துக்கொள்வது சால சிறந்தது. மேலும் வடகிழக்கு மூலை அறையை குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும் மற்றும் வடகிழக்கு அறையை தியானம் செய்வதற்கும், குழந்தைகள்/பெரியவர்கள் படுத்து உறங்கும் அறையாகவும் பயன்படுத்தலாம்.

வாஸ்துவில் நான்கு மூலைகளில் கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக வாயு மூலையும், அக்னி மூலையும் சற்றே தாழ்திருக்க வேண்டும், இப்படி அமைக்கும் போது ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு பகுதி இயற்கையாகவே மற்ற எல்லா மூலைகளையும் விட பள்ளமாக ஆகிவிடுகிறது. மேலும், பஞ்ச பூதங்களில் வடக்கு திசை என்பது தண்ணீரைக் குறிக்கும். எனவே ஈசான்யம் பள்ளமானதால் தண்ணீர் இங்கே இருக்கும் நிலை உண்டானது. இதுவே உண்மையான தாத்பர்யம்.

#தொழில் மேம்படுவதற்க்கும், #கடன் சுமை தீர்வதற்க்கும், #குடும்பத்தில் #நிம்மதி கிடைப்பதற்க்கும், நிறைவான #செல்வ வளம் பெற்று வளமான #வாழ்க்கை வாழ்வதற்க்கும் #உளவியல் சார்ந்த நிரந்தர #தீர்வுகள் #ஆண்டாள் #வாஸ்துவின் அடிப்படையில் வழங்கப்படும்..தொடர்புக்கு ஆண்டாள் #வாஸ்து குழுமம் 94999 55970
ஆண்டாள் வாஸ்துவானது பரிகாரங்களுக்கு அப்பாற்பட்டது

 #கர்மவினைகளும் அதன் பலாபலன்களும் ஒருவரினுடைய வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை தருகின்றன? அதற்கான தீர்வுகள் என்ன?மனித...
04/11/2019

#கர்மவினைகளும் அதன் பலாபலன்களும் ஒருவரினுடைய வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை தருகின்றன? அதற்கான தீர்வுகள் என்ன?
மனித பிறவி என்பதே ஒரு கர்ம வினையாகும். நமது கர்ம வினைகளின் #பலாபலன்களை அனுபவிப்பதற்காகவே இப்பிறவி எடுத்துள்ளோம். இப்பிறவியிலாவது நம்மால் இயன்ற அளவு நற்பலன்களை செய்து நம் #சந்ததியினர்க்கு நல்ல கர்மாக்களை சொத்தாக கொடுத்து விட்டுச் செல்வோம். அது உங்கள் சந்ததியினரை நோய் நொடி இன்றி எந்த ஒரு மனக் குழப்பங்களோ கஷ்டங்களோ இல்லாமல் நீண்ட காலம் நற்பெயருடன் ஒரு #பிரம்மாண்ட வாழ்க்கையை வாழ வைக்கும். அவர்களுக்கு சொத்து சுகம் சேர்த்து வைப்பதை காட்டிலும் நீங்கள் செய்யும் நற்பலன்கள் அவர்களை மென்மேலும் நன்றாக வாழ வைக்கும். ஒருவற்கு அவர்களுடைய பாரம்பரிய சொத்துக்கள் #பரம்பரையாக வாரிசுகளுக்கு எவ்வாறு கிடைக்க பெறுகின்றனவோ அவ்வாறே கர்ம வினைகளும் கிடைக்க பெறுகின்றன. நாம் முடிந்தவரை இப்பிறவியிலாவது முன்னோர்களின் கர்ம வினைகளை சரி செய்து நல் வினைகள் பல செய்து நமது சந்ததியினர்க்கு ஒரு பிரம்மாண்டமான #வாழ்க்கை வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்குவோம்.

நாம் நம்முடைய இந்த இயந்திர உலகத்தில் எப்போதுமே வாழ்வில் நடக்கக்கூடிய இடர்பாடுகளோடும், #பிரச்சினைகளோடும் வாழப் பழகிவிட்டோம். ஒரு போதும் அதற்கான வழிகளை ஆராய்ந்து பிரச்சினைகளைத் தீர்த்து பிரச்சினையின்றி வாழ இயலாமல் போய்விட்டது.

இது போன்ற சூழ்நிலையில் நமக்கு #இயற்கையின் அடித்தளமாக விளங்கும் விலை மதிப்பில்லா சூரிய ஒளியை நாம் நம் வீட்டில் சரியான முறையில் பயன்படுத்தினாலே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதே #வாஸ்து #சாஸ்திரத்தின் அடிப்படை உண்மையாகும்.

#தொழில் மேம்படுவதற்க்கும், #கடன் சுமை தீர்வதற்க்கும், #குடும்பத்தில் #நிம்மதி கிடைப்பதற்க்கும், நிறைவான #செல்வ வளம் பெற்று வளமான #வாழ்க்கை வாழ்வதற்க்கும் #உளவியல் சார்ந்த நிரந்தர #தீர்வுகள் ஆண்டாள் #வாஸ்துவின் அடிப்படையில் வழங்கப்படும்..தொடர்புக்கு ஆண்டாள் #வாஸ்து குழுமம் 94999 55970

#ஆண்டாள் வாஸ்துவானது #பரிகாரங்களுக்கு அப்பாற்பட்டது....!!!

 #கந்த  #சஷ்டி 6 வது நாள் #சூரசம்ஹாரம் திருச்செந்தூரில்இன்று நிகழ்கிறது! இதன் சுவாரசியங்கள் !!  சூரனை வதம் செய்யும் சூர ...
02/11/2019

#கந்த #சஷ்டி 6 வது நாள்
#சூரசம்ஹாரம் திருச்செந்தூரில்
இன்று நிகழ்கிறது!
இதன் சுவாரசியங்கள் !!

சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருக்கிறது.

மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன் தம்பிக்குள் தகராறாகி, கோபித்துக்கொண்ட முருகன் மலை மீது ஏறி நின்ற கதைகள் பல கேட்டிருப்போம். அப்படி பட்ட முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் பல சுவாரசியங்களும், இன்ப அதிர்ச்சிகளும் நிறைந்தது இந்த சூரசம்ஹாரம். இதையே பெரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். அதுவும் திருச்செந்தூரில். சிக்கலில் வேல் வாங்கி வந்த முகம், செந்தூரில் சூரனை வதம் செய்த முகம் என்று முருகப் பெருமானின் பெருமை களை பாடுவார்கள்.

திருச்செந்தூரில் சூர சம்ஹாரம்
திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் இன்று மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக் கு படையெடுக்கிறார்கள்.

முருகனின் படை வீடுகள்
தமிழகத்தில் திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர்,சுவாமிமலை, பழமுதிர்சோலை என ஆறு இடங்களில் முருகனின் படை வீடுகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில் இரண்டாம் படை வீடானதிருச்செந்தூரே தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தலமாகும். இங்குதான் சூரசம்ஹாரப் பெருவிழா நடந்துவருகிறது.

தேவர்களுக்கும், முனிவர்க ளுக்கும் தொல்லை கொடுத் துவந்த கொடியஅரக்கனான சூரபத்மனை முருகப்பெரு மான் போரிட்டு அழித்து தேவர்களையும், முனிவர் களையும் காத்தார். சூரபத்ம னை அழிந்து தேவர்களை காத்த முருகப்பெருமானின் பக்தி திருவிளையாடல் நிகழ்வானது திருச்செந்தூர் கடற்கரையிலேயே நிகழ்ந்தது. இதனால் மற்ற திருத்தலங்களில் இல்லாத அளவிற்கு சூரசம்ஹார திருவிழா பாரம்பரியத்
துடன் பக்தர்களால் ஆண்டுதோறும் கடற்கரை யில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது

அழிக்க முடியாத சூரன்
சிவபெருமானை நோக்கி தவம் செய்து பல ஆண்டுக ளுக்கு பிறகு ஒரு வரத்தை பெறுகிறான் . அது தன்னை யாரும் அழிக்க முடியாது எனும் வரம். தேவர்களுக் கும், முனிவர்களுக்கும் பொறுக்க முடியாத தொல் லைகள் பலவற்றைக் கொடுத்து தன் அழிவைத் தேடிக்கொண்டான். சூர பத்மனை சிவனால் அழிக்க முடியாது. இதனாலேயே தன் மகனை வைத்து அழித்தார் என்றும் கதை கூறுகிறது.

தந்தை இட்ட கட்டளையை ஏற்ற முருக பெருமான், தாயிடம் வேல்வாங்கி சூரனை அழிக்க திருச்செந் தூர் நோக்கி வருகிறார். இந்த வேல் வாங்கும் நிகழ்வு சிக்கல் பகுதியில் மிக கோலாகலமாக நடைபெறும்.

‌திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். முருகப் பெருமான் அன்றைய தினத்தில் இந்த வாசல் வழியாக உள்நுழை வார் என்றும் நம்பப்படுகி றது. வள்ளி தெய்வானை யுடன் காணப்படும் முருகன், அந்த நாளில் மட்டுமே, தன் முதல் மனைவியோடு திருக் கோவில் புகுவாராம்.

சூரசம்ஹார விழா நாளில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்யப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடை பெறும், மேலும் அதிகாலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம் நடத்தப்படுகிறது. இதன் பின்னர் திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் முருகப் பெருமானின் தரிசனம் காண்கின்றனர். காலை 9 மணிக்கும், மதியம் 1 மணிக்கும் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. இந்த இரண்டு சமயங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். மதியம் 2 மணிக்கெல்லாம் மக்கள் கடற்கரையில் கூடத் தொடங்குகின்றனர்.மாலை 4.30 மணிக்குமேல் கடற் கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்

திருச்செந்தூரில் சுப்ரமணியர், சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்ரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். இவர்கள் அனைவருமே முருகப் பெருமானின் ரூபங்கள் தான் என்பது சுவாரசிய மான தகவல் ஆகும்.

மாலை நடைபெறும் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா கடற்கரையில் நடக்கும். பகல் யாகசாலை யில் இருந்து ஜெயந்திநாதர் தபசு மண்டபத்திற்கு எழுந்த ருள்வார். தபசு மண்டபத்தில் நடத்தப்படும் வழிபாடுக ளைத் தொடர்ந்து முருகப் பெருமானான ஜெயந்திநா தர் தனது படை பரிவாரங் களுடன் மாலையில் கடற்க ரையில் சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டு செல்வார். அங்கு நடக்கும் போரில் ஆறுமுகப்பெருமான் சூரபத் மனை அழித்து வெற்றியை நிலைநாட்டுவார்.

#கந்தசஷ்டி திருவிழாவின் ஆறுநாட்கள் விரதம்இருந்து முருகப்பெருமானை வணங் கினால் #குழந்தைவரம், #திருமணவரம் உள்பட கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பது #ஐதீகம். #திருச்செந்தூரில் நடக்கும் கந்தசஷ்டி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்துவரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலய வளாகத்தில் தங்கியிருந்து ஆறு நாட்கள் கடும் விரதம் மேற்கொள்வர்.

- Andal E Swaminathan

Wish you all Happy & Prosperous Diwali 2019
27/10/2019

Wish you all Happy & Prosperous Diwali 2019

அசைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடுவதனால் ஏற்படும்  #கர்மவினைகள் ஒருவரை எவ்வாறு  #பாதிக்கும்? #கர்மாவின் காரணமாக  #பிறவி...
16/10/2019

அசைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடுவதனால் ஏற்படும் #கர்மவினைகள் ஒருவரை எவ்வாறு #பாதிக்கும்?

#கர்மாவின் காரணமாக #பிறவி எடுத்தவன் #மனிதன், அதைக் கரைக்கவே மனித பிறவி..தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் மிகவும் குறைவு, மாமிச உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம், எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவக் கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.

அம்மாவை தேடி அலையும் தாயில்லாத குஞ்சுகள் மற்றும் குட்டிகள் தாயின் மனம் மற்றும் அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்? அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணரவேண்டியது இதுதான், அதிக பாசம் உள்ள ஆடு கோழி மீன் இவைகளை மனிதன் உண்பது #பாச #தோஷம் ஆகும், அந்த #தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான் அந்த #கர்மாவையும் சேர்த்து கரைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக #அசைவம் உண்ணலாம்

சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்காததால், காட்டில் கூட ஆடு, மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.புலி, சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியையே மிருகம் என்று கூறுகின்றோம்.ஆக, #சைவ உண்ணிகளுக்கு #மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.

உடலால் மனித பிறவி சைவம்...
உயிரால் மனித பிறவி சைவம்...
குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.

ஆடு, மாடு, மான், யானை போன்றவை உடலால் சைவம், உயிரால் சைவம், மனதாலும் #சைவம்.

ஆகவே, மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே மனிதனின் #தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் #முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.

 #சரணாகதி (Saranagathi - surrender) என்பது  #இந்து சமயத்தின்  #வைணவ அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலு...
09/10/2019

#சரணாகதி (Saranagathi - surrender) என்பது #இந்து சமயத்தின் #வைணவ அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளான திருமாலிடத்தில் ஒப்புவிக்கும் ஒரு வகையான பக்தியாகும். சரணாகதி தத்துவம் #இராமானுசர் மற்றும் #சைதன்யர் ஆகியவர்களால் வலியுறுத்தப்பட்டதாகும்.
பக்தனின் உயர்ந்த குறிக்கோளான #திருமாலையும் #இலக்குமியையும் அல்லது #கிருஷ்ணரையும்இராதையையும் அடைவதற்கு, சரணாகதியே எளிதானது என இராமானுசரும், சைதன்யரும் போதிக்கின்றனர்.
வீடணன் மற்றும் கஜேந்திரன் முறையே இராமர் மற்றும் #பெருமாளிடம் செய்த சரணாகதி வைணவ சமயத்தில் பெரிதும் போற்றப்படுகிறது.
ஒரு சமயம் கண் தெரியாத சாது கையில் ஒரு கோலை பற்றிக்கொண்டு காவிரி நதிக்கரையின் வழியே சென்றுகொண்டு இருந்தார். நதியில் வெள்ளம் பெருகிக்கொண்டு இருந்தது. ஓர் இடத்தில காவிரியின் கரை முற்றிலும் மூழ்கி இருந்தது இதனை கவனிக்க இயலாத சாதுவும் அதில் மூழ்கிவிட்டார். கையிலிருந்த கோலும் அடித்துச்செல்லப்பட்டது, அவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார் கண் தெரியாததால் அவரால் நீந்தவும் முடியவில்லை. பின்னர் அவர் இறைவனை அடையவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எண்ணி முழுவதுமாக #இறைவனின் மீது ஒப்பற்ற நம்பிக்கை வைத்து #பூரண சரணாகதி அடைகிறார். முயற்சியேதும் இல்லாமல் உடலை வெறுமனே தளர்த்துகிறார். கணநேரத்தில் பகவானை சரணமடைந்துவிட்டார். அந்த சமயம் யாரோ ஒருவர் கையைப் பிடித்து கரையேற்றிவிட்டார், அங்கு அவருக்கு மற்றொரு கோலும் கிடைத்தது. அதன் துணையுடன் அவர் நடக்கத் தொடங்கினார்.
இதன் கருத்தாவது: பகவானைச் சரணடைந்து, தன்னைப் பற்றிய #கவலை நீங்கியவனாக இருப்பவனுக்கு தன் பொருட்டு செய்துகொள்ள வேண்டியது எதுவும் இல்லை. பகவான் தன்னை எப்படி வைத்தாலும் #மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
#தொழில் மேம்படுவதற்க்கும், #கடன் சுமை தீர்வதற்க்கும், குடும்பத்தில் #நிம்மதி கிடைப்பதற்க்கும், நிறைவான #செல்வவளம் பெற்று வளமான #வாழ்க்கை வாழ்வதற்க்கும் #உளவியல் சார்ந்த தீர்வுகள் #ஆண்டாள் #வாஸ்துவின் அடிப்படையில் வழங்கப்படும்.
ஆண்டாள் வாஸ்து குழுமம்
தொடர்புக்கு : 94999 55970

 #கர்மா என்றால் என்ன?கர்மா அடிப்படையில் ஒருவரினுடைய  #வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது? #இந்து மத  #தர்மத்தில் கர்மா என்ற ...
17/09/2019

#கர்மா என்றால் என்ன?
கர்மா அடிப்படையில் ஒருவரினுடைய #வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது?

#இந்து மத #தர்மத்தில் கர்மா என்ற சொல் மிகப் பிரசித்தி பெற்றது. நமது பேச்சு முதல் செயல் என எல்லாவற்றிற்கும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி எதிர்வினை அல்லது கர்மா உண்டு. அது என்னவென்று பின்வரும் கதையின் மூலமாகப் பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில், அரசன் ஒருவன் #அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது. எவரும் அதை கவனிக்க வில்லை.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார். #அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான #வினைகளை நிர்ணயிக்கும் #சித்ரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. யாருக்கு இந்த #கர்மவினையைக் கொடுப்பது? கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா? #கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது; அது அதன் தவறு இல்லை. இறந்து போன #பாம்பின் விஷம் அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை. அரசனும் இதை வேண்டுமென்றே செய்ய வில்லை. அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.

'சரி தன் எஜமானான #எமதர்மனிடமே கேட்கலாம்,' என்று தன் குழப்பத்தைக் கூறினான் சித்திரகுப்தன். இதைக் கேட்ட #எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும், #காலம் வருமவரை பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்தினான்.

அதற்கான நாளும் வந்தது. சில அந்தணர்கள் உதவி கேட்டு, அந்த #அரசனைக் காணச் சென்றார்கள். #அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அவளும் சரியான பாதையை அவர்களுக்கு விளக்கி விட்டு அவர்களிடம் “ ஒரு விஷயம். சற்று எச்சரிக்கையாக இருங்கள். இந்த அரசன் அந்தணர்களைக் #கொல்பவன்” என்று கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்ரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை இந்தப் #பெண்மணிக்கே என முடிவு செய்தான்.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருக்குமானால் #பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும். பழி சொன்னதற்காக; நடந்த எதையுமே உணராமல் #அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே கர்மவினை அனைத்தும் வந்து சேரும்.

எனவே, மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும். பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும். இந்து தர்மத்தின் முக்கிய விஷயமாக இந்த கர்மா கருதப்படுகின்றது. ஒருவர் திடீரென உயர்வது, தாழ்வதும் அவரின் கர்மாவின் அடிப்படையில் கூட நிகழலாம்.

#ஆண்டாள் #வாஸ்து குழுமம்
தொடர்புக்கு : 94999 55970

Address

No. 9, Ganapathi Nagar, Porur
Chennai
600116

Telephone

+919962253540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prabanja Vastu Member of Andal Vastu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category