Ereal.in - Real Estate Classifieds

Ereal.in - Real Estate Classifieds இது Construction world நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் வெப்சைட்.

Ereal - இது Construction world நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் வெப்சைட். தேனீ மாவட்டத்தில் கடந்த 18 வருடங்களாக கட்டிட துறையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையிலும் தனது முத்திரை பதித்து வருகிறது. தற்போது தேனீ மாவட்டத்தில் மட்டும் இயங்கும் இந்த வெப்சைட் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் விரிவு படுத்தப்படும். இந்த வெப்சைட் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட அணைத்து விபரங்களையும் சந்தை படுத்

தும் நோக்கில் அமைக்க பட்டுள்ளது. இந்த வெப்சைட் ல் உங்கள் Property பற்றிய விபரங்களை அளித்து பயன் பெற்று கொள்ளவும். உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் . நன்றி !

Unknown to a lot of lost opportunities. Damn, when we came to know later that they do not try to work would be required ...
29/06/2016

Unknown to a lot of lost opportunities. Damn, when we came to know later that they do not try to work would be required to leave the sobbing had become.
We brought this to the suffering of the application should be aware of this.
The application is really fantastic.

https://play.google.com/store/apps/details?id=com.dotnetwebs.jobsportal

State Government Jobs
Indian Government Jobs
Military Jobs
Police Jobs
Railway jobs
UPSC jobs
SSC jobs
Engineering Jobs
Kattumanaturai jobs
Catering jobs
Bank jobs
Insurance Jobs
Divide into separate parts so easily built in search.
What is written in the 10th and 12th graduates are in a separate section. Awesome ....... Of course, it will look at using ...
Share with friends ... and of course for anyone.

https://play.google.com/store/apps/details?id=com.dotnetwebs.jobsportal

10/08/2013

மொட்டைமாடிக்கு ஹீட் ப்ரூஃப் கோட்டிங்

மொட்டை மாடியின் தரைப்பகுதியை நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்விட்டு கழுவ வேண்டும். தரையில் விரிசல் ஏதாவது இருக்கிறதா, நீர்க்கசிவு இருக்கிறதா என்பதைப் பார்த்து அதைச் சரி செய்ய வேண்டும். பிறகு, பட்டி சுண்ணாம்பு எனப்படும் கரைசலை திக்காகக் கரைத்து தேவையான இடத்தில் பிரஷ்ஷால் பூசி விடவேண்டும். இதை வெயில் நேரத்தில் செய்யக் கூடாது.

வெயில் இறங்கிய மாலை நேரத்தில்தான் செய்ய வேண்டும். இந்தப் பூச்சை 3 மணி நேரத்துக்கு காய விட்டால் போதும். வெள்ளை நிறம் என்பதால் தரை சூடாவதைத் தடுத்து வெப்பத்தை கிரகிக்காமல் தடுத்துவிடும். இன்னும் குளிர்ச்சி தேவைப்படுகிறவர்கள் ‘ஹீட் ஷீல்டு’ என்கிற எக்ஸ்ட்ரா கோட்டிங் பயன்படுத்தலாம். இந்த பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கரைசலை பேஸ்ட் போல தரையில் பூசினால் வெப்பத்தை மாற்றி அனுப்பிவிடும்.

இதற்குப் பொதுவாக 10 ஆண்டு உத்தரவாதம் தரப்படுகிறது. ‘ஹீட் ப்ரூஃபிங்’ முறையினால் 60 சதவிகித வெப்பம் குறையும். மழை பெய்தாலும் பாதிப்பு இருக்காது. ஆனால், கலவை பூசப்பட்ட இடத்தில் பொருட்களைப் போட்டு அடைக்கக் கூடாது. ‘சன் ரிஃப்ளெக்ட்’ என்ற புதிய முறையும் இருக்கிறது. இதை மொட்டை மாடியின் சுற்றுச் சுவரிலும் பயன்படுத்தலாம். மழை பெய்தாலும் பாசி படியாது… விரிசலும் வராது.

ஆனால், மழை சீசனில் அறை வெப்பநிலை அப்படியே இருக்கும். குளிர்ச்சி தெரியாது. ஒரு கோட்டிங் மட்டும் செய்ய ஒரு சதுர அடிக்கு ரூ.30ம், 2வது கோட்டிங்கும் சேர்த்துச் செய்ய ஒரு சதுர அடிக்கு ரூ.50ம் செலவாகும். புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வசதியாக இப்போது ஹீட் ப்ரூஃபிங் டைல்ஸ்களும் வந்துவிட்டன. சிமென்ட்டுடன் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கலந்த டைல்ஸை மொட்டை மாடித் தரையில் பொருத்தினால் போதும்.

இதை நீங்களாகவே செய்து கொள்ள விரும்பினால் முதலில் மொட்டை மாடியில் உள்ள விரிசல் உள்ளிட்ட குறைகளை சரிசெய்ய வேண்டும். பிறகு, சுண்ணாம்பு கலவையில் ஃபெவிகாலை சரியான அளவில் கலந்து பிரஷ்ஷால் இடைவெளி இல்லாமல் அடிக்க வேண்டும். அவ்வளவுதான். இப்போது ‘தெர்மோ சீல்’, ‘சூர்யா கூல்’ போன்ற நிறுவனங்களும் ‘ஹீட் ப்ரூஃபிங்’ கலவையை ரெடிமேடாக விற்கிறார்கள்.

ஒரு லிட்டர் கலவையை 40 முதல் 50 சதுர அடி வரை அடித்துக் கொள்ளலாம். பிராண்டுக்கு ஏற்றமாதிரி 5 லிட்டர் கொண்ட கலவை சுமார் ரூ.1,500க்கு கிடைக்கிறது. 2 ஆண்டுகள் தாக்குப் பிடிக்கும்.

-www.ereal.in

தேனிக்கு மிக மிக அருகில் மத்திய அரசின் நுட்ரினோ ப்ராஜெக்ட் செல்லும் 100 அட�....read more…

10/08/2013

சொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்

Posted by Er.Karthikeyan S

“சம்பாதிக்கிற பணத்தை ஏதாவது ஒரு நிலத்துல போடு. அது உனக்கு பின்னால நிலையான வருமானத்தைக் கொடுக்கும்”

இது ரஜினிக்கு அவரோட அப்பா சொன்ன அறிவுரை. நல்ல அட்வைஸ் தான். உண்மையான அட்வைஸ் தான்.

பிடிச்ச இடத்தில் மனை வாங்கினாலும், பிரச்சினை இல்லாமல் வாங்குவது எப்படி? வாங்குபவர்களுக்கு உதவ, சில டிப்ஸ். செக்லிஸ்டாகவும் பயன்படுத்தலாம்.

- நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.

- உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.

- மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும்.

- அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது.

- அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.

- உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.

- முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.

- 13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.

- சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.

- மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.

- அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

- அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.

- அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.

- விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.

- விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

- நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

- பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை,
* விற்பனை ஆவணம்
* தாய் ஆவணங்கள்
* வில்லங்க சான்றிதழ்
* பட்டா, சொத்து வரி ரசீதுகள்

நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து இது மாறுபடும். தேவைப்படும் ஆவணங்கள் கூடும்.

ஹாப்பி ப்ராபர்டி பர்சேஸ்! -www.ereal.in

10/08/2013

கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். வீடு கட்டுவது என்பது நம்மில் பெரும்பாலனோர்க்கு கனவாகவே இருப்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று மனையின் விலை. மற்றொன்று கட்டுமான பொருட்களின் ஜெட்வேக ஏற்றம். இந்த இரண்டும் தான் வீடு கட்டுவோர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இதே போல ஏற்கனவே வீடு கட்டியவர்களிடம் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது அவர்கள் கூறும் கருத்துக்கள் மேலும் பயத்தை உருவாக்கும்.
இத்தனை லட்சத்திற்குள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நினைத்ததை விட பல மடங்கு செலவாகிவிட்டது என்று புலம்புவார்கள்.

இதற்கு எல்லாம் அடிப்படை காரணம் சரியாக திட்டமிடல் இல்லாதது தான். மனையின் விலையை பொறுத்த வரை நம் கையில் ஒன்றும் இல்லை. காரணம் சந்தை மதிப்பு, அருகாமையில் உள்ள சைட் விற்பனை விலை இவற்றை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது.

நாம் வாங்க நினைக்கும் சைட்டின் அருகாமையில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட சைட்டின் விலையை விட குறைந்த பட்சம் 10 சதவீதம் கூடுதலாக தான் நாம் வாங்க முடியும். இது தான் இன்றைய ரியல் எஸ்டேட் நிலைமை. ஆனால் கட்டுமானத்தை பொறுத்த வரை நாம் தான் எல்லாமே. ஆனால் அந்த அளவுக்கு நாம் முடிவு எடுக்கின்றோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.கட்டுமானத்தை பொறுத்த வரை செலவுகளை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகளை கையாளலாம்.

அதற்கு திட்டமிடுவது மிகவும் அவசியமாகின்றது. கட்டுமான பொருளை தேர்வு செய்வதில் இருந்து கட்டிடத்தை வடிவமைப்பது வரை ஒவ்வொன்றையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட வேண்டும். குறிப்பாக நவீன தொழில் நுட்பங்களை கையாள்வதன் மூலம் செலவினங்களை குறைக்க முடியும். இதே போல வழக்கமாக கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தினாலும் செலவினங்களை சற்று குறைக்க முடியும்.

வராந்தா,மாடி கைப்பிடி சுவர்,பாத்ரூம்,வெண்டிலேட்டர் இவற்றில் கிரில் அமைப்பதற்கு பதிலாக வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கிராதி அமைப்பதன் மூலம் பெரும் பங்கு செலவை கட்டுப்படுத்தலாம். இதே போல செங்கல்லை கொண்டு 9 அங்குல சுவர் கட்டுவதற்கு பதிலாக எலிபொறி கட்டுமானம் எனும் வகையை பின்பற்றினால் 25 சதவீத அளவு செங்கற்களின் அளவை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். தரை அமைப்பதற்கு மார்பிள், கிரானைட் இவற்றிக்கு மாற்றாக லினோலியம், வினைல் முதலியவற்றால் ஆன தரையை அமைக்கலாம்.

இதே போல தேக்கு மரங்களுக்கு பதிலாக நாட்டு மரங்களை பயன்படுத்தி தேக்கு பாலீஸ் அடித்தால் அசல் தேக்கு மரம் போலவே காட்சியளிக்கும். வலுவூட்டப்பட்ட கான்கிரீட்டை பயன்படுத்தி உத்திரங்கள்(லிண்டெல்) அமைக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக செங்கற்களை குத்தாக அடுக்கி அவற்றின் வெற்றிடத்தில் இரும்பு கம்பிகளை இணைப்பதன் மூலம் சிக்கனமாக அதிக பாரம் தாங்க கூடிய உத்திரங்கள் உருவாக்க முடியும். இதே போல சாதாரண செங்கற்களுக்கு பதிலாக பிளைஆஷ் செங்கற்களை பயன்படுத்தலாம்.

இந்த செங்கற்களால் பூச்சு வேலையின் போது 10 சதவீத சிமெண்ட் மிச்சப்படுத்த முடியும். இதே போல சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல் சுவர்களை இணைக்கும் இன்டர்லாக்கிங் கற்கள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.இன்டர்லாக்கிங் கற்களை பயன்படுத்துவதன் மூலமாக கூலி ஆட்கள் செலவை கட்டுப்படுத்த முடியும். சிமென்ட் கலவைக்கு பயன்படுத்தும் மணல் விலை தினந்தோறும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுவது வழக்கமாகும். இதை தவிர்க்க செயற்கை மணல் என்று கூறப்படும் கல்குவாரிகளிலிருந்து பெறப்படும் மணல்துகள்களை பயன்படுத்தி கட்டுமானத்தை மேற்கொள்ளலாம்.

ஆற்றுமணலுடன் மூன்றில் ஒரு பங்கு செயற்கை மணல் சேர்த்தால் கட்டுமானத்தின் தரம் பல மடங்கு அதிகரிக்கும். இதே போல ஒவ்வொரு பாத்ரூமிற்கும் ஒரு வாட்டர் ஹீட்டர் பொருத்தும் நடைமுறை இருக்கின்றது. இதற்கு பதிலாக ஒரே ஒரு சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தும் போது அனைத்து பாத்ரூம்களுக்கும் சுடுதண்ணீர் கிடைத்துவிடும்.

தண்ணீர் தொட்டி, செப்டிக்டேங்க் ஆகியவற்றை செங்கற்கள் கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்வதை தவிர்த்து தற்போது சந்தைக்கு வந்துள்ள பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி பயன்படுத்தலாம். இதனால் கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான செலவு ஆகியவை பெரும் பகுதி குறையும். இப்படி ஒவ்வொன்றையும் நன்கு திட்டமிட்டு செயல்பட்டால் வீடு கட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டிற்குள் வீட்டை கட்டி சந்தோஷமாக குடியேறிவிடலாம். -www.ereal.in

10/08/2013

நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது.

இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

”என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்” என்று புலம்புவர்கள் ஒருபக்கம்…

”எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்… இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு” என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்… ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்… ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்…

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.

கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்(U.D.S).

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. ‘பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்…

வீடு கட்ட மாடல் பட்ஜெட்

என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்… உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்… நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்…

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்… அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்… நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.

கட்டிய வீட்டை வாங்கும்போது, கவனிக்க வேண்டியவை..!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

சொந்தமாக வீடு கட்டும்போது, கவனிக்க வேண்டியவை..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும். - www.ereal.in

10/08/2013

Difference between CMDA and DTCP
Last Updated on Wednesday, 06 March 2013 16:35
Written by wikilife
Wednesday, 06 March 2013 15:51
Attention: open in a new window. PDFPrintE-mail
Difference between CMDA, DTCP, LPA and NTDA

CMDA stands for Chennai Metropolitan Development Authority. DTCP stands for Directorate of Town and Country Planning. Both CMDA and DTCP are involved in activities such as planning, approving layouts, approving buildings, taking action against unapproved building, etc., in the state of Tamil Nadu. However, the jurisdiction of CMDA is Chennai Corporation along with 16 municipalities, 20 town panchayats and 10 panchayat unions around chennai. The jurisdiction of DTCP is all of Tamil Nadu except that coming under CMDA.

Both CMDA and DTCP are functioning under the Town and Country Planning Act, 1971.

LPA stands for Local Planning Authority. LPA s are bodies functioning under DTCP. Around 27 LPAs are functioning under DTCP. Some powers of DTCP are delegated to LPA s.

NTDA stands for New Town Development Authority. NTDA s also function under DTCP. NTDA is formed in such locations identified as possessing special potential like heritage importance, tourism importance, historical importance, etc. The objective is to develop the potential areas into new towns.

10/08/2013

புதிதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய வீடு இப்படி தான் அமைக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பார்கள். ஆனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நபர் கனவை நிறைவேற்றக்கூடியவராக இருப்பாரா என்ற கவலை ஒரு புறம் இருக்க செய்யும். உங்கள் கனவு இல்லம் நனவாக சில முக்கிய அம்சங்களை புதிய வீடு கட்ட உள்ளவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

புதிய வீடு கட்டுபவர்களுக்கு சில டிப்ஸ்:

மனையை சதுரம் செய்யும் போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். அஸ்திவாரம் அமைக்கும் போது மண் பிடிமானம் இல்லாத போது கன்சாலிடேசன் செய்து திமிசு கட்டையில் நன்றாக அடித்த பிறகு கான்கிரீட் போட வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டிடத்தின் பேஸ்மென்ட் தேவையான அளவு உயரமாக வைக்க வேண்டும்.

கட்டுமானத்தின் போது கவனிக்க வேண்டியவை

கட்டுமானத்தின் போது வாட்டர் லெவல் டியூப் கொத்தனார் பயன்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்து நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். செங்கற்களை நனைத்த பிறகே கட்ட அனுமதிக்க வேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும் முடிவில் குத்து கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சுவர் கட்டும்போது இணைப்பு வரும்போது கண்டிக்கல் உடைத்து போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்ட அனுமதிக்க கூடாது. இதற்கு மேல் அனுமதித்தால் தரம் குறைந்துவிடும். செங்கல் சுவருடன் காலம், பீம் போன்றவை இணைக்கும் போது கம்பிவலை வைத்து தேவைக்கு ஏற்ப 6,8 எம்.எம் கம்பி துளையிட்டு கட்டுதல் வேண்டும்.

கலவையின் போது மணல், ஜல்லி, சிமென்ட், தண்ணீர் ஆகியவை தேவையான அளவில் கலக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக மணலில் வரும் களிமண் கட்டிகள், சிறிய கற்கள் ஆகியவற்றை அகற்றிய பிறகு கலவை போடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பூச்சு வேலை செய்வதாக இருந்தால் நன்றாக மணல் சலித்த பிறகு தான் பயன்படுத்த வேண்டும். கதவு, ஜன்னல்களை பொருத்துவதற்கு முன்பாக வாட்டர் லெவல் டியூப் உபயோகிக்கப்படுகின்றதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

தரையில் வாட்டத்தை வைத்து கிரானைட், டைல்ஸ், மார்பில் ஆகியவை போட வேண்டும். கட்டிடத்திற்கு காலை, மாலை கட்டாயம் தண்ணீர் விடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாடிப்படிகள் அல்லது வீட்டின் முன் படிகள் அமைக்கும் போது அனைத்து படிகளும் ஒரே சீரான முறையில் அமைக்கப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும் போது அனைத்து இடங்களில் சம அளவு உயரத்தில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். போர்டிகோ அமைக்கும் போது தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் வாட்டம் வைக்கப்படுகிறதா, லெவல் டியூப் கொண்டு சரிபார்க்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

Address

142, North Car Street
Chinnammanur
625515

Telephone

7373222266

Alerts

Be the first to know and let us send you an email when Ereal.in - Real Estate Classifieds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ereal.in - Real Estate Classifieds:

Share

Category