17/11/2021
பள்ளிக்கு இடம் கொடுத்த தியாகிக்கு, பள்ளிக்குள் சிலை வைக்க எதிர்ப்பு!
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டங்களில் காந்தி அவர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்த பலர், காந்தியடிகள் போலவே வாழ்ந்தார்கள், காந்தியடிகள் சொன்னதை செய்தார்கள், சிலர் காந்தியடிகள் என்ன விரும்பினாரோ அதை செய்து முடித்தார்கள்.
அப்படிப்பட்ட காந்தியின் பற்றாலர்களில் ஒருவர், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வாழ்ந்து வந்த இலச்சுமண ஐயர்.
இவரது தந்தையர், டி.சீனிவாச ஐயர் அவர்கள், 1937 ல், பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போதைய கோவை மாவட்டத்தில் டி.எஸ் வங்கி என்ற பெயரில் வங்கி நடத்தியவர். ஏழை எளிய மக்களுக்கு நிபந்தனையில்லாமல் கடன் கொடுத்து உதவியவர்.
இவரது மகனான இலட்சுமண ஐயருக்கும், இளமையிலேய காந்திய நெறியிலும், நாட்டுப்பற்றிலும் ஈடுபாடு கொண்டவர். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீவிர அன்பு செலுத்திய அவர், சுதந்திர போரிலும், சத்தியாக்கிரக போரட்டத்திலும், கலந்து கொண்டு நான்காண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
குஜராத்தில் காந்தியடிகள் நடத்தி வந்த சமர்பதி ஆசிரமத்திற்கு 1032ல் சென்று திரும்பிய இலட்சுமண ஐயர், தானும் அது போலவே ஒரு ஆசிரமம் நடத்தவேண்டும் என்ற ஆவலில், கோபியின் வடக்கு பகுதியில் உள்ள ராமாபுரத்தில் உள்ள தனது சொந்த நிலம் ஆறு ஏக்கரில், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கென்றே ஒரு பள்ளிக்கூடமும், தங்குவதற்கு விடுதியும் கட்டி அதை 1935ல் திறந்து வைத்தார்.
பின்னர் 1957ல், கட்டப்பட்ட ஒரு வகுப்பு கட்டிடத்தை அப்போது முதல்வராக இருந்த காமராசர் அவர்கள் திறந்து வைத்துள்ளார். அந்த விடுதியும், பள்ளியும் இன்னும் கோபியில் செயல்பட்டுவருகிறது. 1957 ல் கோபி நகராட்சி தலைவராக இருந்தபோது பவானி ஆற்றிலிருந்து கோபிக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை செயல் படுத்தினார்.
மனிதனின் மலத்தை, மனிதன் அல்லும் அவலம் இந்த நாட்டில் இருக்கக்கூடாது என கந்தியார் சொன்னபோது, கோபி நகராட்சி தலைவராக இருந்த இலட்சுமண ஐயர் அவர்கள், கோபி நகராட்சியில் முதன் முறையாக தனிநபர் சுகாதார கழிப்பிட திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்காக இலட்சுமண ஐயர் அவர்களுக்கு பின்னர் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
இப்போதய நகராட்சி தலைவர்கள் பதவிக்கு வந்தவுடன் நகரத்தில் உள்ள சொத்துகளில் பாதியை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்வார்கள், ஆனால், இலட்சுமண ஐயர் அவர்களோ, நகராட்சி தலைவரானபோது, கோபி நகரத்தில் தனக்கு சொந்தமாக இருந்த பல ஏக்கர் நிலங்களை பள்ளிக்கூடங்கள் கட்டவும், மாணவர் விடுதிகள் கட்டவும் தானமாக கொடுத்துள்ளார்.
இப்போது, கோபியில் புகழ் பெற்றிருக்கும் வைரவிழ மேல்நிலைப்பள்ளி, வைரவிழ மெட்ரிக் பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளுக்கான இடங்கள், மாணவர் விடுதிக்கான இடம், நகராட்சி நீரேற்று நிலையத்திற்கான இடம், பொதுப்பணித்துறை பாசன அலுவலகத்திற்கான இடம் ஆகியவை இந்த இலட்சுமண ஐயர் இலவசமாக கொடுத்துதான்.
இலச்சுமண ஐயர் பற்றி கேள்விப்பட்ட பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் ஐயரை கூப்பிட்டு பாராட்டியதுடன், அவரது வள்ளல் குணத்தால் சொத்துகளை எல்லாம் மக்களுக்கு கொடுத்துவிட்டு, குடும்பம் சிரமத்தில் இருப்பதை தெரிந்து கொண்டு, தமிழ் நாட்டில் ஒரு சக்கரை ஆலை தொடங்குவதற்கான உரிமத்தை ஐயர் பெயருக்கு கொடுத்துள்ளார்.
ஒரு வருடகாலம் அந்த உரிமத்தை வைத்துக்கொண்டு, ஆலை தொடங்க முடியாமல், கடைசியில் அப்போது உணவு அமைச்சராக இருந்த சி.சுப்ரமணியத்திடம் கொண்டுபோய் இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்லி கொடுத்துள்ளார்.
சி.எஸ். அவர்கள் தான், ஐயர் அவர்களின் சக்காரை ஆலை உரிமத்தை பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அந்த உரிமத்தில் தொடங்கப்பட்டது ஆப்பக்கூடல் சர்க்கரை ஆலை என்கிறார்கள் கோபி நகர மக்கள்.
பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ஒருமுறை கோபி வந்தபோது, இருவரும் சந்தித்து கொண்டார்கள். அடுத்து ஐயர் அவர்கள் நான் சீதாலட்சுமி திருமண மண்டபத்திற்கு போகிறேன் நீங்கள் அங்குதானே போகிறீர்கள்..? என்று மகாலிங்கத்தை கேட்டதாகவும், அதற்க்கு மகாலிங்கம் அவர்கள், நான் அங்கு போகவில்லை என்று சொல்லிவிட்டு காரில் கிளம்பிப் போய்விட்டார்.
பின்னர், பக்கத்திலிருந்த ஒருவர், ஐயரை சைக்கிளில் உட்கார வைத்து கொண்டுபோய் திருமண மண்டபத்தில் விட்டுள்ளார். அப்போது மகாலிங்கமும் அங்கு இருந்ததை பார்த்த ஐயர், சைக்கிளில் சென்றவரிடம் நானும், மகாலிங்கமும் பேசியது யாருக்கும் தெரியாக்கூடது என்று சொல்லியுள்ளார்.
நாட்டுப்பற்றும், மக்களுக்கு தொண்டரும் பண்பும் கொண்ட தீவிர காங்கிரஸ் பற்றாளராக இருந்த ஐயர் அவர்கள், இபோதைய காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கையாலும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாலும் வெறுப்படைந்து 1988, முதல் காங்கிரஸ் கட்சியை விட்டு, ஜனதா தளத்திற்கு சென்றுவிட்டார்.
1989 ல், நடந்த கோபி நகர மன்ற தேர்தலில், முப்பது வார்டுகளில் போட்டியிட்ட ஜனதாதளம் கட்சியின் நகரமன்ற உறுப்பினர் வேட்பாளர்களில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.ஆனால், நகர மன்ற தகைவர் பதவிக்கு போட்டியிட்ட இலட்சுமண ஐயர் மட்டும் வெற்றி பெற்று விட்டார். தனக்கு ஆதரவாக ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் தலைவர் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.
பலகோடி மதிப்பு மிக்க சொத்துக்களை எல்லாம் ஊர் நலனுக்காக கொடுத்துவிட்ட அவரது குடும்பம் சராசரியான குடும்பமாகிவிட்டபோதும், கவலைப்படாமல், தனது கடைசி காலம்வரை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், ஏழ்மை நிலையில் உள்ள மானவர்களுக்கும் தன்னால் முடிந்த கல்வி உதவியை செய்து வந்துள்ளார் இலட்சுமண ஐயர். கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று, தனது 93 வது, வயதில் காலமாகிவிட்ட ஐயருக்கு கோபி நகரமே கண்ணீர் சித்தி இறுதி மாறியாதை செலுத்தியது.
பொதுமக்கள் சார்பில், நகராட்சியில் ஐயர் அவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. நகராட்சியின் சார்பிலும் ஐயர் அவர்குக்கு சிலை வைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேரப்பட்டது.
புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட விவசாயத்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபி நகராட்சிக்கு வந்தபோது மதிமுக மாவட்ட துணை செயலாளர் வழக்குரைஞர் ம.கந்தசாமி, காந்தியின் வழியில் வாழ்ந்து காட்டிய ஐயர் அவர்களுக்கு நாம் மரியாதையை செய்ய வேண்டுமென்றால், கோபி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கந்தியார் சிலைக்கு, நேர் எதிரில் வைரவிழ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தான், ஐயர் அவர்களுக்கு சிலை வைக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார்.இதில் அனைவருக்கும் உடன்பாடு ஏற்ப்பட்டதால், உடனடியாக வேலையை தொடங்கும் படி சொன்ன செங்கோட்டையன் சிலைக்கு ஆகும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லியுள்ளார்.
வைரவிழா மேல்நிலைப்பள்ளி வழக்கத்தில், இலட்சுமண ஐயர் அவர்களுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கி கொடுக்குமாறு கேட்டு சிலை அமைப்புக்குழுவின் சார்பாக பள்ளி நிர்வாக குழுவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது.இலட்சுமண ஐயர் அவர்களுக்கு பள்ளிவளாகத்தில் சிலை அமைப்பது பற்றி முடிவெடுக்க கடந்த 18ம் தேதி கூடிய பள்ளியின், சிறப்பு கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஐயர் அவர்களின் சிலையை பள்ளிவளாகத்தில் வைப்பது, பள்ளிக்கு பெருமை ஆனால், முன்னாள் நிர்வாக குழு தலைவரான ஏ.ஆர்.எஸ்.சச்சிதானந்தன், வழக்குறைஞர் கே.எம்.நடராஜன், மருத்துவர் சத்திய சுந்தரி ஆகிய மூவர் மட்டும், பள்ளி வளாகத்தில் ஐயர் அவர்களுக்கு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். கோபி நகரத்தில் இருக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் எரிச்சல் ஏற்படுத்தியுள்ள இந்த செயல் பற்றி பேசிய வழக்குறைஞர் மா.கந்தசாமி. “இலட்சுமண ஐயர் ஒரு பெரிய மனிதர், காந்திய வாதி, ஊருக்கு உழைத்தவர், நேர்மையானவர், எளிமையானவர், இந்த ஊரில் அவரைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை, அவரது சிலையை மாணவர்கள் மத்தியில் வைப்பது மாணவர்களையும் எதிர்காலத்தில் இவரைப்போல வரவேண்டும் என்ற எண்ணம வளர ஏதுவாக இருக்கும். அதனால் தான், பள்ளியில் வைக்க முடிவு செய்தோம், தவிர பள்ளியின் நிலம் அவர் கொடுத்தது தான், அவரது நிலத்தில் அவருடைய சிலையை வைக்க கூடாது என்று சொல்லும், வழக்குறைஞர் கே.எம்.நடராஜனின் அண்ணன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எம்.இராமசாமிக்கும், மருத்துவர் சத்தியசுந்தரியின் கணவர் ஜனகரத்தினத்துக்கும், கோபி, கலை அறிவியல் கல்லூரியின் வளாகத்தில் சிலை வைத்துள்ளார்கள்.
இது எந்த வகையில் நியாயம்...? எதிர்ப்பு தெரிவிக்கும் மூவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள், ஐயர் அவர்களை சமூக கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஐயர் அவர்களைப் போல் வேறு யாரும் உதவிகள் செய்ததில்லை. அந்த உயரிய எண்ணம் கொண்ட மனிதருக்கு வைரவிழா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தான் சிலை வைப்போம் இதற்க்காக மக்களையும், அனைத்து கட்சியினரையும் திரட்டி போராட தயாராகி வருகிறோம், ம.தி.மு.க சார்பில் இதற்க்கு அனுமதியும் கொடுத்துவிட்டார்கள் என்றார்