15/12/2024
கலீலியோ விஞ்ஞானியா? திருடனா?
மேற்கத்திய விஞ்ஞானிகள் வானத்தைப் பார்க்காமல் அரபியர்களின் நூல்களைப் பார்த்து, அவற்றிலுள்ள நிலவைப் பற்றிய ஆராய்ச்சிகளைத் திருடி, தாமே சொந்தமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது போல காட்டிக் கொண்டனர்.
உதாரணமாக, கலீலியோ கலீலீ என்ற இத்தாலிய விஞ்ஞானி தனது கண்டுபிடிப்புகளை அரபுக்களின் நூல்களிலிருந்தே நகலெடுத்தார். இத்தாலியிலுள்ள பழைய அரபு நூலொன்றில் உள்ளதையே அவர் தன் ஆய்வாக முன்வைக்கிறார்.
டெலஸ்கோப் என்ற ‘’தொலைநோக்கி’’யை, தான் கண்டுபிடித்ததாக கலீலியோ கூறியுள்ளார். ஆனால் அதை அவர் அப்பாசிய்யா கிலாஃபத்தின் அறிஞரான அபூ ஹாமித் அல்அஸ்ட்ராலபீ என்பவரிடமிருந்து திருடியுள்ளார் என்பதே உண்மை.
மேலும் அவர், கோள்களை சுற்றியுள்ள சந்திரன்களின் ஆய்வை “அல்அப்ஆத் வல்அஜ்ராம்” என்ற அரபு கையெழுத்துப் பிரதியிலிருந்து திருடியுள்ளார். இன்றும் இக்கையெழுத்துப் பிரதி ஆக்ஸ்ஃபோர்டில் உள்ளது. முன்னர் அது இத்தாலியில் இருந்தது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்பதை, தான் கண்டுபிடித்ததாக கலீலியோ கூறினார். ஆனால் இக்கண்டுபிடிப்பை முழுக்க முழுக்க அவர், அப்பாசிய்யா கிலாஃபத்தின் அறிஞரான அல்பிரூனி அவர்களின் “மிஃப்தாஹு இல்மில் ஃபலக்” என்ற நூலில் இருந்து திருடினார் என்பதே உண்மை.
Geocentric theory என்ற புவி மையக் கோட்பாடு தவறானது என்பதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று கலீலியோ கூறினார். ஆனால் அப்பாசிய்யா கிலாஃபத்தின் அறிஞரான இப்னு ஷாத்திர் அவர்களின் ஆராய்ச்சியை அவர் திருடியுள்ளார் என்பதே உண்மை.
விஞ்ஞானி இப்னு ஷாத்திர் அவர்கள்தான் “பூமியும் கோள்களும் முறையாக சூரியனைச் சுற்றி வருகின்றன.கோள்களோ சூரியனோ பூமியைச் சுற்றவில்லை” என்பதை உறுதிப்படுத்தியவர். இது அவர்களின் “நிஹாயத்துஸ் சூல் ஃபீ தஸ்ஹீஹில் உசூல்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதைக் காப்பியடித்து தனது சொந்தக் கண்டுபிடிப்பாக காட்டியுள்ளார் கலீலியோ.
இந்தக் கண்டுபிடிப்புகள் கலீலியோவுக்குரியவை என்பதற்கு எந்த பௌதீகச் சான்றுகளுமில்லை. மடாலயத்தின் குருக்களுடனும் அறிவியல் அறிஞர்களுடனும் அவர் விவாதங்களில் ஈடுபட்டபோது அவர் இந்தக் கண்டுபிடிப்புகளை தன்னுடையவை என்று பரப்பினார். உண்மையில் அவர் அரபுக்களின் நூல்களிலிருந்து திருடியுள்ளார்.
அப்பாசிய கிலாஃபத்தின் அறிஞர்கள் அப்படியல்ல.அவர்களே இந்த கண்டுபிடிப்புகளின் உண்மையான சொந்தக்காரர்களாக இருந்தனர்.
அப்பாசிய கலீபாக்கள் கட்டித்தந்த, வானியல் கோபுரங்களை (மிர்சாத்= observatories) அடிப்படையாகக் கொண்டு அவர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
முந்தைய நாகரிகங்களில் வெறும் கோட்பாடுகளாக இருந்த வானியல் அறிவியல், அப்பாசிய்யா கிலாஃபத்தின் காலத்தில்தான் முதன்முறையாக கண்காணிப்பு மற்றும் பார்வை அடிப்படையிலான அறிவியலாக செயல்பாட்டுக்கு வந்தது.
பட விளக்கம்:
~~~~~~~~~
கீழே இணைக்கப்பட்டுள்ள படம், அப்பாசிய கிலாஃபத்தின் விஞ்ஞானியான அல்பிரூனி அவர்களுடைய நூலின் ஒரு பக்கம்.
இதில், நிலவின் பல்வேறு நிலைகளைச் சித்தரித்துள்ளார். அந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலவின் வேறுபட்ட படிநிலைகளை எடுத்துக் காட்டுகிறார். இது அரபி மாதம்(30 நாட்களாக) முழுமை பெறுவதையும் முழுமை பெறாமல் (29 அரை நாட்களாக) இருப்பதையும் விளக்கும்.
பிரகாசமான அந்த பக்கங்கள், ஒளிமிகுந்த அப்பாசிய கிலாஃபத்தின் காலத்திற்கே நம்மை கூட்டிச் செல்கின்றன.
ஆனால் கலிலியோ, 800 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை திரும்ப வரைந்து, தனது கண்டுபிடிப்பாகக் காட்டிக் கொண்டார்.
https://www.facebook.com/share/p/15d8pD786P/?mibextid=WC7FNe
ஆதாரம்:
1. அஃலாமுல் முஹந்திஸீன ஃபில் இஸ்லாம் (அகமத் தைமூர் பாஷா.)
2. Life: The Science of Biology, (David E. Sadava)
3. A Summary of Scientific Method, (Peter Kosso)
4. முஃஜமுல் புல்தான் , (யாகூத்துல் ஹமவி)
5. மவ்சூஅத்து உலமாயில் அரப் வல்முஸ்லிமீன் வ அஃலாமுஹும்.(முஹம்மத் பாரிஸ்)
தமிழ்வடிவம்: இல்யாஸ் ரியாஜி.
علماء الغرب سرقوا اكتشافات القمر من العرب وسجلوها بأسمائهم لم ينظروا للسماء بل لكتب العرب فمثلا غاليليو غاليلي اكتشافاته نقلها من كتب العرب وهذا كتاب عربي قديم بإيطاليا.
فادعى غاليليو أنه هو الذي اخترع التلسكوب وفي الحقيقة أن هذا الاختراع قام بسرقته من العالم العباسي ابو حامد الاسطرلابي ومنه أيضا سرق رصد الاقمار حول الكواكب حيث أخذه من مخطوطة "الأبعاد والأجرام" وهذه المخطوطة موجودة اليوم في أوكسفورد بعد أن كانت في ايطاليا
وادعى غاليليو أنه اكتشف دوران الأرض حول محورها وفي الحقيقة قام بسرقة هذا الاكتشاف بحذافيره من كتاب العالم العباسي البيروني "مفتاح علم الفلك".
وادعى غاليليو أنه هو الذي اكتب خطأ نظرية "مركزية الأرض" ولكن الحقيقة أنه سرق هذا الاكتشاف من العالم العباسي ابن الشاطر الذي أثبت أن الأرض والكواكب هي التي تدور حول الشمس بانتظام وليس الكواكب والشمس هي التي تدور حول الارض وهذا موجود في كتابه "نهاية السول في تصحيح الأصول" وهذا الكتاب العظيم منه نقل غاليليو غاليلي
والسرقة من كتب العرب هي السبب الحقيقي في فشل غاليليو غاليلي في إثبات هذه الاكتشافات عندما دخل في مناظرات مع العلماء ورهبان الكنائس فليس هو صاحب هذه الاكتشافات ولا يستند لدليل مادي يعتمد عليه، بعكس العلماء العباسيين أصحاب هذه الاكتشافات، والذي كانوا يستندون لقيام الخلفاء العباسيين ببناء المراصد في مختلف أنحاء الدولة العباسية، ففي عهد الدولة العباسية تم تطبيق نظام الرصد أي الملاحظة العلمية بعد أن كانت الحضارات السابقة علم الفلك لديهم علماً نظرياً مجرداً من الملاحظة والرصد.
-
والصورة المرفقة مع المقال هي لصفحة من مخطوطة للعالم العباسي البيروني والتي فيها عرض اطوار القمر وفي كل صفحة يعرض اشكالاً أخرى لهذه الأطوار وذلك بحسب اكتمال الشهر العربي أو عدم اكتماله، هذه الصفحة الرائعة التي تنقلنا إلى العصر العباسي الرائع
ثم أتى غاليليو غاليلي بعد 800 عام ليرسم نفس الرسمة ويدعي أنه مكتشفها.
***** المصادر:
1) أعلام المهندسين في الإسلام، أحمد تيمور باشا
2) Life: The Science of Biology, David E. Sadava
3) A Summary of Scientific Method, Peter Kosso
4) معجم البلدان، ياقوت الحموي
5) موسوعة علماء العرب و المسلمين و أعلامهم، محمد فارس