தூத்துக்குடி நண்பர்கள்

தூத்துக்குடி நண்பர்கள் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தூத்துக்குடி நண்பர்கள், Real Estate, Tamilnadu Police Colony.

26/04/2026
06/12/2025

🏡 “பட்டா பெயர் மாற்றம் தாமதமாகும் 5 காரணங்கள்”

பட்டா பெயர் மாற்றம் செய்ய சில மாதங்கள் ஆகிறது — இது சாதாரணமா?
ஆம்! இதற்கு பொதுவாக காரணம் இந்த 5:

1️⃣ Document mismatch

Sale deed / EC / Chitta / Adangal detail-கள் பொருந்தாமை.

2️⃣ Previous owner dues

House tax, water tax, EB dues pending-ஆ இருந்தால் file hold.

3️⃣ Survey issue

Survey number அல்லது subdivision clarity இல்லாமல் இருந்தால் கடைசிவரை தாமதம்.

4️⃣ Online application error

எனவே village / taluk update தவறாக போனால் system reject.

5️⃣ VAO → RI → Tahsildar file movement delay

இது தான் அதிகமாக காணப்படும் reason.

பட்டா பெயர் மாற்றத்தை உடனே செய்யாமல் delay செய்தால்
➡️ future-ல் resale, loan, legal verification எல்லாம் சிக்கலாகும்.
அதனால் SALE DEED க்கு 30 நாட்களுக்குள் initiate பண்ணுவது பாதுகாப்பான நடைமுறை.

📞 Doubts? Help Needed?

M.raja 7092192121

*போலீசார் தவறு செய்யும் போது —அவர்களுக்கு எதிராக புகார்   தெரிவிக்க எப்படி? எங்கு புகார் செய்யலாம்? எப்படி சரியான நடவடிக...
27/11/2025

*போலீசார் தவறு செய்யும் போது —அவர்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க எப்படி? எங்கு புகார் செய்யலாம்? எப்படி சரியான நடவடிக்கை எடுக்க வைக்கலாம்?*”

******-***********
*◼️ எந்த தவறுகளுக்கு புகார் செய்யலாம்?*

*போலீசார் பின்வரும் செயல்களை செய்தால் சட்டப்படி புகார் செய்ய உரிமை உங்களுக்கு உள்ளது:*

✔ FIR எழுத மறுத்தல்
✔ லஞ்சம் கேட்பது / எடுத்தல்
✔ அடித்தல் / தவறாக நடத்தல்
✔ பழி சுமத்துதல் / போலி வழக்கு
✔ தேவையின்றி காவலில் வைக்குதல்
✔ பெண்களுக்கு பெண் போலீஸ் இல்லாமல் விசாரணை
✔ ஆதாரம் மறைத்தல் / விசாரணை செய்யாமல் விடுதல்
✔ மரியாதையற்ற பேச்சு / மிரட்டல்

◼️ எங்கு புகார் செய்யலாம்? (சரியான செயல்முறை)

🔵 1) எஸ்பி (Superintendent of Police) – மாவட்ட போலீஸ் தலைமை

FIR எழுத மறுக்கப்பட்டால், நேராக SP-க்கு புகார் செய்யலாம்

SP FIR பதிவு செய்ய POLICE STATION-க்கு வழிமுறை அனுப்ப முடியும்

SP Office-ல் எழுத்து வடிவில் புகார் + ஆதாரங்கள் கொடுங்கள்

🔵 2) DIG / IGP / DGP – மேல்மட்ட போலீஸ் அதிகாரிகள்

*SP நடவடிக்கை எடுக்காவிட்டால், மேல்மட்ட அதிகாரிகளுக்கு எழுதலாம்:*

➡ DIG
➡ IGP
➡ DGP (State Police Chief)

*🔵 3) District Collector / District Magistrate*

*காவல்துறை தவறுகளில் மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரம் உள்ளது*.

🔵 4) Police Complaint Authority (PCA) – மாநில போலீஸ் புகார் ஆணையம்

போலீஸ் தவறுகள் / கொடுமை / மரணங்கள் போன்ற உயர்ந்த புகார்கள்

மாநில PCA-க்கு புகார் → விசாரணை → தண்டனை / நீக்கம் பரிந்துரை செய்யப்படும்

🔵 5) Human Rights Commission (NHRC / SHRC) – மனித உரிமை ஆணையம்

காவல் துறை கொடுமை / மிரட்டல் / அத்துமீறல்

NHRC (தேசிய)

SHRC (மாநில)

*⏱ 30 நாட்களுக்குள் விசாரணை தொடங்க வேண்டியது கட்டாயம்*

🔵 6) Vigilance and Anti-Corruption (லஞ்ச புகார்கள்)

போலீசார் லஞ்சம் கேட்டால் → நேராக விழிப்புணர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு

*7) கோர்ட் வழி*

*SP FIR பதிவு செய்யாவிட்டால்:*

Section 156(3) CrPC – Judicial Magistrate Court
→ கோர்ட் நேராக FIR பதிவு செய்ய உத்தரவிட முடியும்

Habeas Corpus – சட்டவிரோத காவலில் வைத்தால் High Court-க்கு மனு

*◼️ புகார் செய்ய என்னென்ன சேர்க்க வேண்டும்?*

*புகார் கடிதத்தில்:*

1️⃣ பெயர் / முகவரி / தொடர்பு
2️⃣ போலீஸ் நிலையம் மற்றும் அதிகாரியின் பெயர்
3️⃣ நடந்த தவறின் விவரம் – நாள் / நேரம் / இடம்
4️⃣ ஆதாரங்கள் (ஆடியோ / வீடியோ / சாட்சி / ரசீது)
5️⃣ கோரிக்கை: (நடவடிக்கை / விசாரணை / பாதுகாப்பு)

பிரதி (copy) எடுத்துக்கொள்ளுங்கள் + acknowledgement பெறுங்கள்

*◼️ ஆன்லைனில் புகார் செய்யும் வசதி*

*கீழே பொதுவாக எல்லா மாநிலங்களுக்கும் இருப்பவை:*

🌐 மாநில போலீஸ் இணையதள புகார்
🌐 DGP email
🌐 NHRC / SHRC online complaint portal
🌐 CCTNS online complaint

*புகார் செய்ததற்காக போலீஸ் பழிவாங்கும் போல் பயம் இருந்தால்*

*உங்கள் புகாரில் கீழே வரி எழுத வேண்டும்:*

> “என்னக்கு பாதுகாப்பு வழங்கவும். பழிவாங்கும் நடவடிக்கை நடந்தால் நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்குகிறேன்.”

இதனை சட்டப்படி கவனிக்காமல் விட முடியாது.

*மிக முக்கியமான சட்ட உதவி*

போலீஸார் FIR எழுத மறுப்பது சட்டவிரோதம்
Supreme Court – Lalita Kumari Vs Govt of UP (2014)

போலீஸ் கொடுமை / தாக்குதல் → IPC Section 166, 330, 331, 342, 348
அதிகார துஷ்பிரயோகம் → Suspension / Criminal Case

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான் ... 🙏

“கூட்டு பட்டா” (Joint Patta) மற்றும் “தனி பட்டா” (Individual Patta) விளக்கம்Follow us onM.V.RAJA பட்டா வகை – கூட்டு & தன...
26/11/2025

“கூட்டு பட்டா” (Joint Patta) மற்றும் “தனி பட்டா” (Individual Patta) விளக்கம்

Follow us on
M.V.RAJA

பட்டா வகை – கூட்டு & தனி

பட்டா என்பது ஒரு நிலத்தின் வருவாய் பதிவில் உரிமையாளர் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும் ஆவணம்.
அது ஒருவருக்கோ அல்லது ஒருசிலருக்கோ இருக்கலாம்.

1️⃣ கூட்டு பட்டா (Joint Patta / கூட்டு உரிமை)

பொருள்:

ஒரே நிலத்திற்கு ஒரே பட்டா, ஆனால் அதில் பலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலை. அதாவது, ஒரே Survey Number அல்லது நிலப்பகுதியை பலர் சேர்ந்து வைத்திருக்கும் உரிமை.

எடுத்துக்காட்டு:

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் அவர்களில் நிலம் பிரிபடாத பாகமாக இருக்கும் காரணத்தில் அவர்களுக்கும் கூட்டு பட்டா தான் அவர்கள் தனி பட்டா வாங்க முடியாது

மேலும் ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள் ஒரே நிலத்தைப் பங்காக வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த நிலத்துக்கு ஒரு கூட்டு பட்டா வழங்கப்படும். அதில் மூவரின் பெயரும் சேர்ந்து இருக்கும்.

சட்டப் பொருள்:

இதில் ஒவ்வொருவருக்கும் சொத்தில் பங்கு (share) இருக்கும்.

ஒருவர் நிலத்தை பிரித்து தனியாக அதை விற்க முடியாது — மற்ற உரிமையாளர்களின் சம்மதம் அவசியம்.

ஆனால் பிரிபடாத பாகமாக விற்க முடியும் ஆனால் அதனை வாங்குவர் சற்று யோசிக்க நேரிடும். (அடுக்குமாடி குடியிருப்பு தவிர்த்து)

கூட்டு பட்டா என்பது உரிமை பங்குகள் சமமாகவோ அல்லது பத்திரப்படி உள்ளபடியே பதிவு செய்யப்படும்.

பயன்பாடு:

குடும்பப் பங்குகள் பிரிக்கப்படாத நிலங்களில் பயன்படுத்தப்படும்.

ஒரு Survey Number முழுவதும் ஒரே குடும்பம் கொண்டிருந்தால் வழக்கமாக கூட்டு பட்டா வழங்கப்படும்.

தனி பட்டா (Individual Patta / பிரிக்கப்பட்ட உரிமை)

பொருள்:

ஒருவருக்கே முழுமையான உரிமை உள்ள நிலம். அந்த நிலத்திற்கு அவரின் பெயரில் மட்டும் பட்டா இருக்கும்.

எடுத்துக்காட்டு:

ஒரு நபர் தனது பங்கான நிலத்தை பகிர்ந்து வாங்கிய பத்திரத்தின் அடிப்படையில் தனி பெயரில் பட்டா பெற்றால், அது “தனி பட்டா” எனப்படும்.

Layout இல் தனி மனை வாங்கிய பின்னர் பத்திர அடிப்படையில் தனி பட்டா வழங்கப்படும்

சட்டப் பொருள்:

அவர் அந்த நிலத்தின் முழு உரிமையாளர்.

விற்பனை, குத்தகை, அடமானம் போன்றவற்றை அவர் தனியாக செய்யலாம்.

தனி பட்டா பெறுவது, உரிமை தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதை காட்டுகிறது.

பயன்பாடு:

பங்குபிரிப்பு (Partition Deed) முடிந்த பிறகு தனி பட்டா பெறுவர்.

வாங்கிய நிலம் முழுமையாக ஒருவருக்கே சொந்தமானால் தனி பட்டா வழங்கப்படும்.

3️⃣ முக்கிய வேறுபாடு (Difference Table)

1. விவரம் கூட்டு பட்டா (Joint Patta)

பெயர்கள் பலர்

உரிமை அனைவருக்கும்

விற்பனை / அடமானம் அனைவரின் சம்மதம் அவசியம் பிரித்து விற்க வேண்டும் எனில் பிரிபடாத பாகமாக இருந்தால் தேவை இல்லை

குடும்ப நிலங்கள் / பிரிக்கப்படாத

வருவாய் பதிவு ஒரே பட்டாவில் பலர்

2. தனி பட்டா (Individual Patta)

ஒருவரே

சொத்து பிரிக்கப்பட்ட நிலம் / தனியார் சொத்து

பங்கு ஒருவருக்கே முழு உரிமை

தனியாக செய்யலாம்

பத்திரம் / தனி கிரய பத்திரம் அடிப்படையில்
ஒவ்வொருவருக்கும் தனி பட்டா

முக்கிய சட்டக் கருத்து

>பட்டா வகை (கூட்டு அல்லது தனி) என்பது
சொத்து உரிமையை தீர்மானிக்காது,
ஆனால் அந்த நிலம் எவ்வாறு பகிர்ந்துள்ளது / யாரின் பெயரில் வருவாய் பதிவு உள்ளது என்பதை காட்டும்.

26/11/2025

அதிசய கோழி.

இறைவன் படைப்பு 🙏💫🙏💥

Address

Tamilnadu Police Colony

Website

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி நண்பர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category