29/07/2023
*ஊடக நண்பர்கள் தயவு செய்து சிந்திக்க வேண்டுகிறோம்*.
*நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி என்று திரும்பத் திரும்ப செய்தி ஒளிபரப்பானது. மோசடி செய்ய முற்படும் எந்த நிதி நிறுவனமும் முதலீடுகளை பணமாக வைத்திருந்து நினைத்த நேரத்தில் சுருட்டிக்கொண்டு ஓடிப் போய்விடும்.* *ஆனால், நியோமேக்ஸ் தனது முதலீடுகளை சொத்துக்களாக மாற்றி வைத்துள்ளது.DTCP, TNRERA அனுமதி பெற்று வீட்டு மனைகளாக மாற்றி பல துணை நகரங்களை பல்வேறு வசதிகளை உருவாக்கி வைத்துள்ளது.*
*எனில், நியோமேக்ஸ் மீது நிதிநிறுவன மோசடி என்று முத்திரை குத்துவது ஊடக அறமாகுமா.?*
*நியோமேக்ஸ் நிறுவனத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. வியக்கத்தக்க வகையில், புகார் மேளா கூட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வெறும் 10க்கும் குறைவான நபர்களே அங்கு வந்தனர். எனில், நியோமேக்சில் முதலீடு செய்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கானோரை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவமதிப்பதும், குழப்புவதும் ஊடக தர்மமாகுமா.?*
*இதுவரை எத்தனை மோசடியில் இது போல் மேளா அமைத்து புகார் பெற்று இருக்கிறார்கள்?*
*இழுத்து மூடப்பட்ட மோசடி நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களின் முதலீடுகள் ஏதேனும் இதுவரை திருப்பிக் தரப்பட்டதுண்டா.?*
*நிதி நிறுவன மோசடிகளில் ஏமாந்த மக்கள் வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். காவல்துறை வந்து இழந்ததை மீட்டுத் தருவதாக உறுதி தரும். அது போல ஒரு நிகழ்வு நியோமேக்ஸ் விவகாரத்தில் நடக்கவில்லையே ஏன்.?*
*ஏனெனில், நியோமேக்ஸ் உறுதி அளித்ததையும் மீறிய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு அதிருப்தி அடைந்த வெகு சில முதலீட்டாளர்கள் நிறுவனத்துடன் முரண்பட்டு நிற்கிறார்கள். அவர்களையும் இந்நிறுவனம் ஏமாற்றாது; கைவிடாது.*
*மற்றபடி, நியோமேக்சின் 99.5 சதவீத முதலீட்டாளர்கள் நிறுவனத்துடன் நிற்கிறார்கள். காரணம், இவர்கள் நியோமேக்ஸ் மீதான நம்பிக்கையின் பங்குதாரர்கள். இத்தனை ஆயிரம் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் தம் நிறுவனத்துக்கு எதிராக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை வெறுப்புடன் பார்க்கிறார்கள். இந்தச் செய்திகளை ஊடகங்களில் திணிப்பது யார் அல்லது எந்த சக்தி என்று தினம் தினம் தமக்குள் கேள்வி கேட்டுக் கொள்கிறார்கள்.*
*நியோமேக்சின் வளர்ச்சியில் ஊடகங்களுக்கும் பங்குண்டு என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அந்த வகையில், இனியாவது நியோமேக்ஸ் குறித்து கண் முன்னால் உள்ள உண்மைகளின் அடிப்படையில், சரியான தரவு ஆதாரங்களின்படி செய்திகளை வெளியிடும்படி கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.*