13/06/2021
கட்டுமான பொருட்களின் விலை கடும் உயர்வு... சிமெண்ட், கம்பிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா?
உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க இன்னொருபுறம், பொருளாதார பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்திருப்பது கட்டட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
கட்டுமானப் பணியாளர்கள்கட்டுமானப் பணியாளர்கள்
தமிழக அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா பேரிடர் காரணமாகவும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இந்தநிலையில் கட்டுமானப் பொருள்களின் திடீர் விலை ஏற்றம் கட்டுமானப் பணிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பொது முடக்கம் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாகச் சந்தைகளுக்குக் கம்பி, சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. தற்போது தளர்வு வழங்கப்பட்ட காரணத்தால் கடைகளிலுள்ள இருப்புகளவிட, தேவை அதிகமாகக் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து செயற்கையாகக் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.
410-430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை 470-500 ரூபாயாக அதிகரித்துள்ளது. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கம்பியின் விலை 70-72 ரூபாயாக அதிகரித்துள்ளது. 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம் சாண்ட் ஒரு யூனிட் 4,000 ரூபாய்க்கும். 4,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வி சாண்ட் ஒரு யூனிட் 5,100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு செங்கல் 28,000 ரூபாயாகவும், 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3 யூனிட் ஜல்லி 9,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கட்டுமானப் பணியில் 50 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விலைவாசி உயர்வு காரணமாகக் கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயத்தில் உள்ளன. சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை நிர்ணயம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என கட்டுமான
பொறியாளர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்...!!
இங்கனம்
இன்ஜினியர்
SUBHAM BUILDERS