Nedumkulam Farmer's Organization

Nedumkulam Farmer's Organization நெடுங்குளத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தலும், முன்மாதிரி மிக்க பலன் தரக்கூடிய பொழுதுபோக்கு தளமாக அதன் சூழலை மாற்றியமைத்தலும்.

01/12/2025

சீரற்ற காலநிலை காரணமாக ( பலத்த காற்று மற்றும் மழை வெள்ளம்) , உங்களது வீடுகளுக்கு, பகுதியளவில், அல்லது முற்றாக சேதம் ஏற்பட்டு இருப்பின், அது தொடர்பாக உடனடியாக உங்களது கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கும் படி வேண்டப் படுகின்றீர்கள்..

உங்களது பாதிப்புகள் தொடர்பாக புகைப்படங்கள் எடுத்து இருப்பின் அந்த புகைப்படங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம், வீட்டின் முகவரி, உரிமையாளரின் பெயர், அடையாள அட்டை இலக்கம் போன்றவைகளை whatsapp மூலமாக உங்கள் பிரதேச கிராம உத்தியோகத்திற்கு அனுப்பி வைக்கும்படி வெண்டப்படுகின்றீர்கள்.

අයහපත් කාලගුණය (තද සුළං, වැසි සහ ගංවතුර) හේතුවෙන් ඔබගේ නිවාස අර්ධ වශයෙන් හෝ සම්පූර්ණයෙන්ම හානි වී ඇත්නම්, ඒ පිළිබඳව වහාම ඔබේ ග්‍රාම නිලධාරී වෙත දැනුම් දෙන ලෙස ඔබෙන් ඉල්ලා සිටිමු.

ඔබ ඔබේ හානියේ, ඡායාරූප ලබාගෙන ඇත්නම්, ඒවා සම්බන්ධතා අංකය, නිවසේ ලිපිනය, හිමිකරුගේ නම, හැඳුනුම්පත් අංකය යනාදිය සමඟ WhatsApp හරහා අදාළ ග්‍රාම නිලධාරී වෙත එවන ලෙස ඉල්ලා සිටිනු ලැබේ.

04/07/2025

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06. 07. 2025) அதாவது நாளை காலை 7 மணி தொடக்கம் காலை 11:00 மணி வரையும் மாரியம்மன் கோயில் சந்தி முதல், வான் சந்தி வரையிலான பகுதிகளில் எம்முடைய இந்த நெடுங்குளம் விவசாய சங்கத்தின் நிர்வாகக் குழுவின் ஏற்பாட்டில் பொதுமக்களுடன் இணைந்து சிரமதான பணி திட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே பொதுமக்கள் அனைவரையும் இதில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இடம்: ஹைராத் பள்ளி முன்பாக

நேரம்: காலை 7 மணி

"இது எமது பரம்பரைப் பொதுச்சொத்து. அதனை உரிமையுடன் பாதுகாப்பது எமது கடமை"

அன்புடன் நெடுங்குளம் விவசாய சங்கம் நிர்வாகக்குழு ❤️ 🌳 🪴 🌱

04/07/2025

அறிமுகம்:

நெடுங்குளம் விவசாயிகள் சங்கமானது
நெடுங்குளத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதுடன், குளத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் விவசாயிகளது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய அரசின் கீழ் இயங்கும் கமநல சேவைகள் திணைக்களத்தின் 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 43 ஆம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட சங்கமாகும்.

ஆரம்பித்த காலம் முதல் இந்த சங்கத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்களது அயராத முயற்சியின் காரணமாக பல்வேறு பட்ட வேலை திட்டங்களை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் இந்த சங்கமானது நெடுங்குளத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் பேணிப் பாதுகாப்பதோடு முன்மாதிரிமிக்க பலன் தரக்கூடிய பொழுதுபோக்குத்தளமாக அதன் சூழலை மாற்றியமைக்கும் பிரதான இலக்குடன் செயற்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த வருடங்களில் நெடுங்குளத்தை அண்மித்த பகுதிகளில் சிரமதானங்கள்,மர நடுகை திட்டங்கள் போன்றவற்றில் இந்த சங்கத்தின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் எவ்வித தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஈடுபட்டு வருவதோடு, குளத்தின் மூலம் வருவாயை ஈட்டிக் கொள்ளும் வகையிலும் அதன் சுற்றுச்சூழலை மேம்படுத்தி சிறந்த பொழுதுபோக்குத்தளமாக மாற்றி அமைக்கும் வகையிலும் பல்வேறு கருத்திட்டங்களை தயாரித்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களோடு இணைந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

Address

Puttalam
61300

Telephone

+94714405450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nedumkulam Farmer's Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share